சென்னை: "தமிழக சட்டசபை வைரவிழா அழைப்பிதழிலும், அதன் கவரிலும் முதல்வர் ஜெயலலிதாவிடம் புகைப்படம் தான் இருக்கிறதே தவிர, ஜனாதிபதி, கவர்னரின் படம் இடம் பெறவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக சட்டசபையின் வைரவிழா சீரோடும், சிறப்போடும் நடந்திட என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். வைரவிழாவில், அவை முன்னவருக்கோ, எதிர்கட்சித் தலைவருக்கோ உரையாற்றும் வாய்ப்பு இருப்பதாக அழைப்பிதழில் இல்லை.இன்று விழா நடைபெறப்போகிறது. இரு நாள் முன்பாக, 27ம்தேதி தேதிதான் ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் அழைப்பிதழே கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு சில மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைத் தவிர, மற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கோ, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கோ அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.வைரவிழா வளைவுக்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை, ஜனாதிபதி பங்கேற்கும் விழாவிலே இணைக்காமல், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை மட்டும் முன் கூட்டியே வைத்துக் கொண்டு, அந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை, முதல்வரே நடத்தி முடித்து விட்டார்.
விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழிலும், அதன் கவரிலும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் தான் இருக்கிறதே தவிர, விழாவிற்கு முக்கிய விருந்தினர்களான ஜனாதிபதியின் படமோ, கவர்னரின் படமோ இடம் பெறவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வைரவிழாவை : புறக்கணிக்கிறது தி.மு.க.,
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பத்த வெச்சுட்டியே பரட்ட.... ம்.... ஏதோ.... ஒன்னால முடிஞ்சுது. பெரியவரே உங்களால சாதாரணமாகவே சட்டசபைக்கு போயி மக்களுக்காக குரல் குடுக்க முடியாதில்ல.... அப்புறம் ஏன் இந்த ஆவலாதி. விடுங்க, இதைவிட கடைசி டெயில் பீஸ்: தேநீர் விருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் பத்தாவது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கிலாம். அதற்கும் சேர்த்து இப்போதே சொல்லிவிட வேண்டியதுதானே "நான் விருந்தில் கலந்து கொள்வதைத் தடுப்பதற்காகவே அவ்வளவு ஆகாசத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்" "என் சக்கர நாற்காலி லிப்ட்-க்குள் நுழைய மாட்டேங்குது" மற்றும் "நான் லிப்ட்-ல் போகும்போது ஏ.சி. நிறுத்தப்பட்டது" என்றெல்லாம் அலசி ஆராய்ந்து ரூம் போட்டு யோசிச்சு கலக (கபட) நாடகத்திற்கான வசனங்களை இப்போதே எழுத்தத் தொடங்குங்கள். அப்போதுதான் நாளைய மலருக்கு கொடுக்க கேள்வி-பதில் அறிக்கை தயார் செய்ய முடியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.