ஐதராபாத்: நார்வேயில் சேட்டை செய்த தங்களது மகனை கண்டித்த இந்திய பெற்றோரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஐதாராபத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி அனுபமா. சந்திர சேகர் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நார்வே நாட்டில் தனது கம்பெனியின் பிராஜக்ட் ஒன்றை செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் நார்வே தலைநகர் ஆஸ்லோ சென்றார் சந்திரசேகர். அங்குள்ள பள்ளி ஒன்றில் அவர்களது 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் சேர்க்கப்பட்டான்.
இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள சந்திரசேகரின் குடும்பத்தார் கூறுகையில், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் ஸ்ரீராம் ஒரு மாத காலத்திற்குப்பின் அவனது குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்டதாகவும், இதையடுத்து கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்த சந்திரசேகர், ஸ்ரீராமை தனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் நார்வே சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். மீண்டும் நார்வே சென்ற சந்திரசேகரன் மற்றும் அனுபமாவை, தங்களது குழந்தையை மிரட்டியதாக அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது எந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு சந்திர சேகரையும், அனுபமாவையும் மீண்டும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிள்ளைகளை , கண்டிப்பதற்கும் - தண்டிப்பதற்கும் , ஒரு அளவு உண்டுதானே,... கண்டிக்கிறேனென்று , இப்படியா சூடு போடுவது? அன்பாலேயும் - திருத்த முடியும் தானே? .... எதற்காக சொன்னார் வள்ளுவன் ...: அன்பிற்கும் உண்டோ , அடைக்கும் தாள் ..." என்று , பட்சிலம் குழந்தை தானே, இறைவன் நம்மிடம் தந்த , அமானிதத்தை , தகுந்தமுறையில் , பாது காப்பதும் , நமது கடமை அல்லவா? பாவம் தானே சிறுவன்...?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.