ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி
அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று, போலீஸ் குடியிருப்பில் அடைத்து
வைத்து கற்பழித்ததாக, ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.தேனி
மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால்சாமி மகன் கருப்பசாமி, 30.
திண்டுக்கல் ஆயுதப்படையில் பணியாற்றுகிறார். ஆண்டிபட்டி அருகே
பொன்னம்மாள்பட்டியில், இவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று
வந்துள்ளார். அப்போது, அடைக்கன்பட்டியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு
மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.மாணவியை, கடந்த மாதம், 16ம் தேதி
கருப்பசாமி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ்
குடியிருப்பில் மூன்று நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார்.
அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்த மாணவி, ஆண்டிபட்டி போலீசில் புகார்
செய்தார். கற்பழிப்பு வழக்கில், கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.