மடத்துக்குளம் :"நடமாடும் இரும்பு பட்டறை' நடத்தி, உடனுக்குடன் மலிவு விலையில் கத்தி, அரிவாளை ராஜஸ்தான் தொழிலாளர்கள் விற்பனை செய்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தனி குழுவாக வந்து, இரும்பு தொடர்பான பொருட்களை உடனுக்குடன் செய்து தருகின்றனர்.
இவர்கள், ஒரே இடத்தில் தங்கள் தொழிலை செய்யாமல், ஒவ்வொரு பகுதியாக செல்கின்றனர்.
ராஜஸ்தான் தொழிலாளர்கள் கூறியதாவது:எங்கள் மாநிலத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. வேறு தொழிலும் தெரியாது; இதனால், ஒவ்வொரு பகுதியாக சென்று இரும்பு பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.குறிப்பாக, விவசாயத்திற்கு பயன்படும் கலப்பை, கொத்து, மண்வெட்டி, கட்டுமானத்துக்கு பயன்படும் கடப்பாரை மற்றும் அரிவாள், கத்திகளை தயாரிக்கிறோம். மக்கள் கொடுக்கும் பழைய இரும்புகளில், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் செய்து வழங்குவதற்கு, கூலியாக 60 ரூபாய் பெற்றுக்கொள்கிறோம். ஒரு பொருள் செய்ய 15 முதல் 30 நிமிடங்கள் ஆகும். ஆனால், எங்களின் உணவு தேவைக்குக்கு கூட கிடைக்கும் வருமானம் கட்டுபடியாகவில்லை.இவ்வாறு, தொழிலாளர்கள் கூறினர்.
ஒரு வேளை உணவிற்காக இனம், மொழி, கலாசாரம் அனைத்தையும் மறந்து நாடோடிகளாக இவர்கள் வாழும் வாழ்க்கை, "உழைக்கும் எண்ணம் இருந்தால் போதும்; உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம்' என்கிற கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த கூலி தொழிலார்களின் உழைப்பை பார்த்திருக்கிறீர்களா? அதுவும் இளம் தாய்மார்கள் பக்கத்திலேய ஒரு சிறிய தொட்டிலில் தங்களின் குழந்தையை போட்டுவிட்டு, பெரிய சுத்தியல் (சம்மட்டி) தூக்கி அடிக்கும் போது இடைவிடாமல் கேட்கும் அந்த சப்தத்தில் எப்படி அக்குழந்தை தூங்கும்? நாட்டின் ஏழ்மையை நீக்க சிந்திக்காத எந்த அரசும் இவர்களின் வாழ்கையை முன்னேற்ற போவதில்லை. உடல் உழைப்பு தவிர (அதுவும் வத்திய, தொத்தலான உருவத்துடன்) இவர்களுக்கு துணை இருப்பது யாரோ? இவர்கள் ஒரு சிறு உதாரணம் தான். இது போல் கூலி தொழிலாளிகள், அடிமை தொழாளிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துன்புறுகின்றனர். இவர்களுக்கென ஒரு நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவர்களின் குழந்தைகளுக்கு சீரிய கல்வி அளிக்க பட வேண்டும்.
வறுமை இந்நாட்டை விட்டு துரத்தப்பட வேண்டும்.....இந்நாட்டு அரசியல் வாதிகளும், உழல் அரசூழியர்களும் திருந்த போவதில்லை.... கடவுளே கண் திறப்பாயா
நெல்லை மாவட்டத்தில் நீங்கள் வீடு கட்ட போறிங்களா????? கொத்தனார் சம்பளம் ஒரு நாளைக்கு 400 முதல் 500 வரை . காலை வேலை ஆரம்பிக்கும் நேரம் 10 :00 மணி உணவு இடைவேளை 01 மணிக்கு குட்டி தூக்கம் 1 மணி நேரம் மாலை 5 மணி வரை வேலை ... ஞாயிறு விடுமுறை முழு போதை மாமிசம் ....திங்கள் கிழமை வேலைக்கு போவது கிடையாது ...இது போக மச்சினிச்சி கல்யாணம் , சித்தப்பா வீட்டில் காது குத்து , ஆஸ்பத்திரி , கோவில் கொடை, வயல் அறுப்பு , மழை, ஊரில் பஸ் ஓடவில்லை , சாதி சண்டை .... இப்படி பல கூத்துகளை நீங்கள் பார்க்கலாம் கேட்கலாம்... சொன்ன நேரத்தில் வேலை முடிக்க மாட்டார்கள் .... இப்படி ஒரு வேலை சோறுக்காக பாடு படும் இவர்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது ..... நம்ம ஊரு ஆளுங்கள் வெளி நாட்டில் போய் கஷ்ட படும் போது தான் அவர்களுக்கு ஊரின் அருமை தெரியும் ......
இதுக்குதான் ஏற்கனவே பீகார் ஒரிசா ஆகிய மாநில வெளிஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர தொடங்கியுள்ளனர். தமிழனுக்கு கவலை இல்லை ரேசன் அரிசி ஒரு ரூவாயில் கிடைக்கிறது டாஸ்மாக்கில் தாக சாந்தி நடக்கிறது. அது போக அடித்து பிடுங்கும் அரசியில் வாதிக்கு அல்லக்கையாக ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக உழைப்பே இல்லாமல் உடம்பு தேயாமல் பணம் சம்பாரிக்க வழி. வேற என்ன செய்வான் தமிழன்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.