சென்னை:""ஜாதி அமைப்புகளை கூட்டி, ஆதிதிராவிடர்களுக்கு எதிராக, பா.ம.க., அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அது, அபாயகரமான அரசியல். ஜாதி வெறியைக் கிளப்புகிறவர்கள், யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியாக ஒரு வாரியமே அமைக்கப்பட்டது. அந்த வாரியம், இப்போது இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை. பா.ம.க., ஜாதி அமைப்புகளை கூட்டி, தலித்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அது அபாயகரமான அரசியல். ஜாதிப் பிரச்னைகளை கையில் எடுப்பது என்பது, தீக்குண்டத்திலே இறங்குவது போன்ற அபாயகரமானது. ஜாதி வெறியைக் கிளப்புகிறவர்கள், யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது தான், எங்கள் கருத்து, வேண்டுகோள்.
தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள, காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னையின் தொடர்ச்சியாக, இரு மாநில மக்களுக்கிடையே, தோன்றிய கசப்புணர்ச்சி, பகை உணர்ச்சியாக உருவாகிடக்கூடாது. கர்நாடக பா.ஜ., ஆட்சியாளர்களும், தமிழக அ.தி.மு.க., ஆட்சியாளர்களும் எந்த நிலையிலும் எள்ளளவும் இடமளித்து விடக் கூடாது. சட்டம்-ஒழுங்கை தக்க முறையில் காத்திடவும், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கும் எந்தவிதமான இடைஞ்சலும், ஏற்படாத அளவிற்கு, நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தூதரகம் விசாரணை:கருணாநிதியின் மற்றொரு அறிக்கை:கார்த்திகை தீபத்தை ஒட்டி, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், வீடுகளில் ஏற்றி வைத்த விளக்குகளையும், கூட சிங்கள ராணுவத்தினர் அடித்து நொறுக்கி, இலங்கைத் தமிழர்கள் மனதை காயப்படுத்தியுள்ளனர். யாழ் பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து, பல்வேறு பல்கலைக் கழகங்களில் காலவரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியை அமெரிக்க தூதரகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுபற்றி இந்தியத் தூதரகமும் விசாரித்து, இந்திய அரசிடம் தெரிவித்து, அரசின் சார்பில், வன்மையான கண்டனத்தை, இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்படியானால் சாதி சான்றிதல்களை ரத்து செய்து உத்தரவிட மத்தியரசுக்கு பரிந்துரை செய்யுங்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளை எல்லாம் தூக்கி எரிந்து ஏழைகளின் வாழ்க்கை தரம் மேம்பட திட்டம் தீட்டுங்கள். உங்கள் ஆட்சி காலத்தில் ஏன் இதை செய்யவில்லை. பின் குறிப்பு: ராமதாசுக்கும் திருமாவளவனுக்கும் கூட்டணியில் சேர்க்காமல் இருக்க கூடாது.
சாதி வெறிய தமிழ்நாட்டில் எரிய வைத்த புண்ணியவான் இப்படியும் பேசுவார் ,அப்படியும் பேசுவார்.ஏனெனில் தமிழ்நாடு மக்களுக்கு இலவசம் என்ற வார்த்தையை உயிர் மூச்சாக்கி அவர்களை ஒன்றுக்கும் உருப்படாமல் செய்து அரசியல் வாதிகள் பின்னும் நடிகர்கள் பின்னும் செல்ல வைத்ததே இவர்தான்.அவர் சொலவடை கேட்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமை. குடும்பம் தேவையில்லை நாடு தேவையில்லை குடியும் இலவசங்களும் போதும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.