Advertisement
திருப்பதி கோவில் தரிசனத்தில் மாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,00:09 IST

சென்னை : ""திருப்பதி கோவிலில், வி.ஐ.பி., தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,'' என, திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் கண்ணையா கூறினார்.சென்னையில் நேற்று கண்ணையா கூறியதாவது: திருப்பதி கோவிலில், திங்கள் முதல் ஞாயிறு வரை, காலையில், 500 ரூபாய் செலுத்தி, வி.ஐ.பி., வரிசையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இந்த தரிசனத்தில், "எல்.1, எல்.2 மற்றும் எல்.3' என, மூன்று பிரிவாக, பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். முதல் வழியில் செல்லும் பக்தர்கள், சாமி அருகே அழைத்துச் செல்லப்பட்டு, ஆரத்தியும், தீர்த்தமும், சடாரியும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. எல்- 2 வழியில் வரும் பக்தர்களுக்கு ஆரத்தி, தீர்த்தம் மற்றும் சடாரி இல்லாமல், தரிசனம் செய்யும் முறை இருந்து வந்தது. தற்போது, இவ்வழியாக வருகின்ற, வி.ஐ.பி., பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி மற்றும் ஆரத்தியுடன், சாமி அருகில் தரிசனம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.3 வழியில், 15 அடி தூரத்திலிருந்து, சாமி தரிசனம் செய்தவர்கள், இனி, சயன மண்டபத்திலிருந்து சாமி தரிசனம் செய்யலாம்.பால், கிச்சடிகாத்திருக்கும் பக்தர்களுக்கு காலை வேளையில், பால் மற்றும் கிச்சடி வழங்கப்படுவதை போல, சாமி தரிசனம் செய்ய, டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும், பால் மற்றும் கிச்சடி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கண்ணையா கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
arabuthamilan - Manama,பஹ்ரைன்
04-டிச-201215:04:55 IST Report Abuse
arabuthamilan சாமி விடுமுறையில் ஊருக்கு போகிறாரா?
Rate this:
2 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.