ஈரோடு: ஈரோட்டில் மின்வெட்டை சமாளிக்க முடியாமல், ஹோட்டல், விடுதி போன்ற நிறுவன உரிமையாளர்கள், சோலார் கருவியை, அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் போதுமான மின் உற்பத்தி இன்றி கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. போதிய காற்றும் இன்றி, காற்றாலை மின் உற்பத்தியும், காலை வாரியது. மின்பற்றாக்குறையை சமாளிக்க தமிழகத்தில் மின்வெட்டு கலாச்சாரம் துவங்கியது.
மின்வெட்டை சமாளிக்க, யு.பி.எஸ்.,ஜெனரேட்டர், இன்வெட்டர் ஆகியவற்றின் உதவியை மக்கள் நாடினர். எனினும், தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை.
இதனால், சென்னை தவிர, தமிழகம் முழுவதும், 10 முதல், 18 மணி நேரம் வரை, கடும் மின்வெட்டு நிலவுகிறது. யு.பி.எஸ்.,சில் சார்ஜ் செய்ய கூட, மின்சாரம் இல்லாமல், யு.பி.எஸ்., விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது.
மின்பற்றாக்குறையை போக்க, வியாபார நிறுவனங்களும், ஹோட்டல் உரிமையாளர்களும், சோலார் கருவியை பயன்படுத்தி வருகின்றனர். ஈரோட்டில் மதிய நேரத்தில், வெயில் அதிகமாக இருப்பதால், சோலார் கருவி எளிதாக சார்ஜ் ஏறி, பயன் தருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது: ஈரோட்டில், யு.பி.எஸ்.,சில் சார்ஜ் சேமிக்கும் அளவுக்கு கூட, மின்சாரம் இருப்பதில்லை. மாநகரில், 10 முதல், 12 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால், வியாபார நிறுவனங்களும், ஹோட்டல் உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிச்சம் இருந்தாலே, மின்வெட்டை சமாளிக்கும் அளவுக்கு, சோலார் கருவி சார்ஜ் சேமிக்கும்.
எனவே, மின்வெட்டை சமாளிக்க, சோலார் கருவியை பயன்படுத்த துவங்கினர். ஈரோட்டில் அதிகாலையில் பனிப்பொழிவு இருந்தாலும், மதிய நேரத்தில் கடும் வெயில் நிலவுவதால், சோலார் கருவி வெகுவிரைவில் மின்உற்பத்தி செய்து சேமிக்கிறது.
நூறு வாட்ஸ் திறனும், 25 ஆண்டு காலம் உழைக்கும் திறன் கொண்ட சோலார் பேனல், பத்தாயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. அதேபோல், ஆயிரம் வாட்ஸ் கொண்ட பேனல், 1.70 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது.
மின்வெட்டை போக்கிடும் வகையில், சோலாரின் பயன்பாடு இருப்பதால், பலரும் சோலார் கருவியை ஆர்வமுடன் வாங்கி பொறுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.