சென்னை: சென்னை யானைகவுனி காவல்நிலையம் அருகே போக்குவரத்து ஒழுங்குப்பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் அடாவடியாக செயல்படுவதால், இரவு நேரங்களில் யானைகவுனி விபத்தின் பிறப்பிடமாக மாறி வருகிறது. சென்னையில் பிஸியான வால்டாக்ஸ் சாலையில் இரவு எட்டு மணிக்கு மேல் லாரிகள் செல்ல அனுமதி இருந்தும், கண்காணிப்பு பணியில் உள்ள போலீசாரை "கவனித்தால்' மட்டுமே லாரி செல்ல அனுமதி கிடைக்கும். டிரைவர்களிடம் மாமுல் வாங்கியதும் லாரியை அனுமதிக்கின்றனர். நேற்று இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரின் அடாவடியாலும் அலட்சியத்தாலும் பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இது போன்ற சம்பவம் அப்பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீசாரே இப்படி ஒழுங்கீனமாக செயல்படுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நான் இந்த யானைகவுனி பகுதியில் கடந்த 40 வருடங்களாக வசித்து வருகின்றேன். அந்த நாள் முதல் இந்த நாள் வரை இதே தொடர் கதை தான். தினமும் இந்த காட்சிகளை என் கண்களால் பார்த்து கொண்டு தான் வருகின்றேன். எந்த அதிகாரிகள் வந்தாலும் இதை ஒன்றும் தடுத்து நிறுத்த முடியாது. இருந்தாலும் வேறு எந்த காவல் நிலையிதிலும் நடக்காத அளவுக்கு இந்த காவல் நிலையத்தில் மிக அதிகமாக ஊழல் குறிப்பாக போக்குவரத்து அதிகாரிகளிடத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது. ஏன் எனில் இங்கு மார்வாடி இனத்தவர் மிக அதிகமாக இருப்தால்தான்.
லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்களை எவ்வளவோ கேவலமாக பேசியாகிவிட்டது. சாலை போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர்களை போல பணம் கேட்ப்பார்கள். அதிகாரமாக....அவர்களுக்கு என்ன திட்டினாலும் உரைக்காது. அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம். போதாததற்கு அவர்களுக்கு தற்போது TOYOTA INNOVA வாகனம் கொடுத்திருக்கிறார்கள். கேட்கவா வேண்டும்? இந்த புகைப்படத்தை நீங்கள் போக்குவரத்து கமிஷ்னரிடமே சென்று நேரடியாக கொடுத்தாலும் அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார். ஏன் என்றால் ,,,, அது எல்லோருக்கும் தெரியும். இந்த புகைப்படத்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு திட்டும் நிலையை எல்லா பொதுமக்களும் தாண்டி வந்து இதை எல்லாம் ஏற்று கொள்ளும் மனபக்குவம் பெற்று வெகு காலமாகிறது. இது TOO LATE . இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுக்கள். இங்கே கருத்து கூறுபவர்கள் மேலும் சிறிது வன்மையாக காவல்துறையினரை திட்டி கருத்து போட்டால் நன்றாக இருக்கும். அதை அப்படியே வெளியிட்டால் இன்னமும் நல்லது. அதை படித்தாவது யாரேனும் ஒரு காவலருக்காவது உறைக்காதா? ஒரு காவலராவது தன்னை திருத்தி கொள்ளமாட்டாரா? அதே சமயம் போக்குவரத்து காவல்துறையினர் லஞ்சம் வாங்க வாகன ஓட்டிகள் இடம் கொடுக்க கூடாது. சாலை விதிகளை சரியாக பின்பற்றினால் எந்த போக்குவரத்து போலீஸ்காரர் லஞ்சம் கேட்க முடியும்? ஆகவே அவர்கள் லஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஏற்படுத்தாமல் இருக்க பொதுமக்களாகிய நமக்கும் அந்த கடமை இருக்கிறது. நாம் அவர்களை திட்டும் அதே சமயம் நம்மை நாமே சிறிது ஒழுங்குபடுத்தி கொள்வதும் இன்றைய இன்றியமையாத தேவை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.