ஆத்தூர்: ஆத்தூர் அருகே 3 மாத பெண் குழந்தையை தண்ணீர் ஊற்றி வைக்கு பிளாஸ்டிக் டிரம்மில் முழ்கி கிடந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் 9-வது வார்டு பகுதியைச் சேர்ந்த கோபி, இவர் திருப்பூரில் பனியன் ஆலையில் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுகன்யா, இவர்களுக்கு பிறந்து 3 மாதம் ஆன ஹரினி என்ற பெண் குழந்தை உள்ளது. இன்று மதியம் வீ்ட்டில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் மூழ்கடித்து இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தாசில்தார் தங்கராஜ், ஆர்.ஐ பாலாஜி, வி.ஏ.ஓ. நாகராஜ் ஆகியோர் டிரம்பில் முழ்கி பலியான குழந்தையை மீட்டனர். இது குறித்து போலீசில் புகார் கூறப்பட்டது. ஏக்தாபூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சுகன்யா மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் குழந்தை கொலை செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.