சென்னை : புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, பெண்கள் இருவர் உடல் நசுங்கி இறந்த வழக்கில், கட்டட உரிமையாளர், மேஸ்திரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சென்னை காசிமேடு, பல்லவன் நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய, கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) வீடுகளில், அடுத்தடுத்து வாடகைக்கு வசித்தவர்கள் துரைகண்ணு மனைவி லில்லி, 75, சுப்பராயன் மனைவி சித்ரா, 50. இந்த வீடுகளை ஒட்டி, புதிதாக இரண்டு அடுக்கு மாடி வீட்டை, கண்ணகி என்பவர் கட்டி கொண்டிருக்கிறார்.நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு, புதிய கட்டடத்தின் சுவர் ஒன்று மூன்றாவது மாடியில் இருந்து இடிந்து, கல்நார் வீடுகள் மீது, பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், வீடுகளின் மேற்கூரை நொறுங்கி விழுந்ததில், தூங்கி கொண்டிருந்த லில்லி, சித்ரா இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, காசிமேடு, பல்லவன் நகர் ஐந்தாவது குறுக்கு தெருவை சேர்ந்த கட்டட உரிமையாளர், செல்வத்தின் மனைவி கண்ணகி, 40, தண்டையார்பேட்டை வினாயகபுரத்தை சேர்ந்த, மேஸ்திரி குமார், 30 ஆகியோரை கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.