ஐதராபாத்: சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்த இரண்டாவது முறையாக ஜாமின் மனுவை சி.பி.ஐ.ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கடப்பா எம்.பி.யுமான ஜெகன்மோகன்ரெட்டி மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு, ஐதராபாத் சான்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. ஜாமின் கோரி கடந்த நவ.16-ம் தேதி மனுதாக்கல் செய்தார். இம்மனு நவ.28-ல் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆந்திரா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சி.பி.ஐ. வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஜெகன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.