பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலால்கரேயில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி (கே.ஜே.பி.,) பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பா.ஜ., - ம.ஜ.த., காங்., கட்சியினர் ஏராளமானோர், கே.ஜே.பி., கட்சியில் இணைந்தனர். பின், எடியூரப்பா பேசியதாவது: பா.ஜ.,வில் முதல்வராக இருந்த போது, நாட்டிலேயே, கர்நாடகத்தை, மாதிரி மாநிலம் ஆக்க ஆசைபட்டேன். என் கனவு நனவாவதற்கு முன், என்னை முதல்வர் பதவியிலிருந்து இறக்கி விட்டனர். கே.ஜே.பி., மூலம், என் கனவுகளை நிறைவேற்றுவேன். தற்போது எனக்கு மேலிடம் என்று எதுவுமில்லை; நான் சுதந்திரமாக செயல்பட முடியும். எனது ஆதரவாளர்களை, அவமரியாதையாக நடத்தினால், 24 மணி நேரத்திற்குள், அரசை கவிழ்க்க தயங்க மாட்டேன் , என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.