திருப்பூர்: தொழில் துறையினருக்காக, தடையில்லாமல் நான்கு மணி நேரம் மின்சாரம் வழங்கும் திட்டம், பரீட்சார்த்த முறையில், நேற்று அமலுக்கு வந்தது. திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள், அதைச் சார்ந்த தொழில்கள்; பல்லடம், அவிநாசி பகுதிகளில், விசைத்தறி; காங்கயத்தில் ஆயில், அரிசி உற்பத்தி, நூற்பாலைகள் என, பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு காரணமாக, தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, தொழிலாளர்களும் வேலை இழப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில், துணை மின் நிலையங்களுக்கு கிடைக்கும் மின்சாரத்தை கணக்கிட்டு, பகலில் கிடைக்கும் மின்சாரத்தை, அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்காமல், தொழில் நிறுவனங்கள் உள்ள மின் பாதைகளுக்கு மட்டும், தொடர்ந்து நான்கு மணி நேரம், தடையில்லாமல் வழங்க, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு மின் பாதையிலும், குறைந்தபட்சம், 50 முதல், 70 சதவீதத்துக்கு மேல் தொழில் நிறுவனங்கள் உள்ள பகுதிகளை தேர்வு செய்து, தொடர்ந்து, நான்கு மணி நேரம் மின் வினியோகம் செய்து வருகின்றனர். நேற்று முதல், இத்திட்டம், பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்துள்ளது. காலை, 7:00 முதல், 11:00 மணி வரை; காலை, 11:00 முதல், பிற்பகல், 3:00 மணி வரை; மதியம், 2:00 முதல், மாலை, 6:00 மணி வரை என, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் கூறியதாவது: தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில், தடையில்லாமல் நான்கு மணி நேரம் மின் வினியோகம் செய்யும் நடைமுறை, பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர் கருத்துகள் அறியப்பட்டு, அதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.