பல்லடம்: பள்ளி மாணவர்களுக்கு பைபிள் வினியோகம் செய்ததை கண்டித்து, இந்து அமைப்பினர், நேற்று, பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமிநாயக்கன்பாளையத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீராமசாமி நாயுடு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம், இப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பைபிள் (புதிய ஏற்பாடு) வழங்கப்பட்டது.
இதையறிந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களுக்கு வழங்கிய பைபிள்களை பள்ளி நிர்வாகத்தினர் திரும்பப் பெற்றுள்ளனர். இத்தகவல் தெரிந்ததும், பா.ஜ., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை சேர்ந்தவர்கள் அப்பள்ளிக்கு சென்றனர்.
"மாணவர்களுக்கு பைபிள் வழங்கி, மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறீர்களா' என தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி பதிலளிக்கையில், ""மாணவ, மாணவியருக்கு பைபிள் வழங்கப்பட்டது எனக்கு தெரியாது. இதுகுறித்து புகார் வந்ததும் மாணவ, மாணவியரிடம் இருந்து பைபிள்கள் திரும்ப பெறப்பட்டு விட்டன. இச்செயலில் ஈடுபட்டது யார்? என கண்டறிந்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று உறுதியளித்தார். அதையடுத்து இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர். இப்பிரச்னை குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.