விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த மூன்று மாணவர்களை, போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சுற்றித் திரிந்த மூன்று சிறுவர்களிடம் விசாரித்தனர். அரியலூர் மாவட்டம், லால்குடியை அடுத்த, அண்ணாமலை மகன், முத்து, 16, கணேசன் மகன், ராம்ஜி, 14, சேகர் மகன், சித்தார்த், 14 (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்பது, விசாரணையில் தெரிய வந்தது. அரசு மேல்நிலைப் பள்ளியில், ராம்ஜி, சித்தார்த் இருவரும், ஒன்பதாம் வகுப்பும், முத்து, பிளஸ் 1 படித்து வருவதும், இரண்டாம் பருவத்தேர்வில் தோல்வியடைந்ததால், பெற்றோருக்கு பயந்து, ரயில் ஏறி வந்தது தெரிந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று காலை, மூவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.