பண்ருட்டி: "தானே' புயல் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு செய்தது தொடர்பாக கிராம உதவியாளர் ஒருவர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சீராங்குப்பத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 46; சீராங்குப்பம் கிராம உதவியாளர். இவர், "தானே' புயல் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதில் முறைகேடு செ#ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், புகார் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவின் பேரில், பண்ருட்டி தாசில்தார் பத்மாவதி, சீராங்குப்பம் கிராம உதவியாளர் மாயகிருஷ்ணனை, தற்காலிக பணி நீக்கம் செய்து, நேற்று உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.