மதுரை:வாக்காளர் பட்டியல் விபரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
வாக்காளர் வரைவு பட்டியல் அக்டோபர் 10ல் வெளியிடப்பட்டது. பின் 1.1.2013 அடிப்படையில், வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நவ., 20ம் தேதி வரை திரும்ப பெறப்பட்டன.
மேலூர் தொகுதியில் 6800, மதுரை கிழக்கு- 11500, சோழவந்தான்- 6200, மதுரை வடக்கு- 8200, தெற்கு- 7600, மத்தி- 9000, மேற்கு- 12,300, திருப்பரங்குன்றம்- 10,800, திருமங்கலம்- 9800, உசிலம்பட்டி 10,000, என, மாவட்ட அளவில் 92 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன. அம்மனுக்கள் பூத் லெவல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர்களின் மொபைல் எண்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி இன்று முதல் நடக்கிறது. இதையடுத்து, வரும் காலங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், வாக்காளர் சேர்க்கை, நீக்கம், வரைவு பட்டியல் வெளியீடு போன்றவை மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும். அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.