சென்னை: உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 37 கோடி செலவில் 11 இடங்களில் மீன்விதைப் பண்ணைகள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள உள்நாட்டு நீர்வளங்களை முழுமையாக பயன்படுத்தி மீன்பிடிப்பை அதிகப்படுத்துவதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய மீன் விதைப் பண்ணைகளை ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், கரூர் மாவட்டத்தில் திருக்கம்புலியூர், திருச்சி மாவட்டத்தில் அசூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் தட்டமனைப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அகரப்பேட்டை, நெய்தலூர், தட்டான்குளம், விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர் அணை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாணியஞ்சாவடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு, கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை ஆகிய 11 இடங்களில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.