மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவரைக் கண்டித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 2ன் தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயவேல் உள்ளார். இந்நிலையில், கட்டட அனுமதி, பெயர் மாற்றம், வரிவிதிப்பு போன்ற விண்ணப்பங்கள் தன்னிடம் அனுமதி பெறவேண்டும் என அவர் கூறி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால், துணை கமிஷனர் சாம்பவியின் உத்தரவின் பேரில் அத்தகைய விண்ணப்பங்கள் ஜெயவேலிடம் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில், மண்டல அலுவலகத்திற்கு வந்த ஜெயவேல், அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதோடு, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பணிகளைபுறக்கணித்ததோடு, சம்பவம் குறித்து துணை கமிஷனர் சாம்பவியிடம் புகார் அளித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.