புதுடில்லி: காவிரியில் தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் தலைமையிலான பெஞ்ச், காவிரியில் தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், காவிரி கண்காணிப்புக்குழு நாளையோ அல்லது நாளை மறுநாளோ கூட்டப்படவேண்டும் என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து காவிரி கண்காணிப்புக்குழுவின் அறிக்கையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு மத்திய அரசின் இதழில் எப்போது வெளியிடப்படும் என்று கேள்வி எழுப்பியதுடன், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.