இது இசைக் கச்சேரிகளின் சீசன், எங்கெல்லாம் சபாக்கள் உள்ளனவோ, அங்கெல்லாம், இசைக்குழுக்கள் மேடையேறி காதிற்கு தேமதுர இசையை வழங்குவர். இந்த நேரத்தில் முழுக்க, முழுக்க பார்வையற்றவர்களே பங்கேற்று பாடும், இசைக்கும் இசைக் குழுவான "தர்ஷன்' இசைக் குழு இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா... காற்றில் கலந்து வந்தபாடல் வரிகள் வசீகரித்தது.
ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ரசிகர்களிடம் இருந்து பலத்த கைதட்டல் எழுந்தது, கைதட்டல், கரகோஷம் அடங்கவும், இப்போது பாடிக்கொண்டு இருப்பவர்கள், "ப்ரீடம் அறக்கட்டளை' யைச் சேர்ந்த, "தர்ஷன்' இசைக் குழுவின் பார்வையற்ற குழந்தைகள் என்று அறிவிப்பு தொடரவும், கைதட்டல் ஒலி மீண்டும் எழுந்து அதிர்ந்தது.
சத்யநாராயணன், மனோஜ், ஸ்ரீலேகா, அக்ஷயா, விஷ்ணுபிரியா, சவுபாக்யா, இந்து, சக்தி ஆகிய பாடகர்களுக்கு, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து பாராட்டும், விழா குழுவினரிடம் இருந்து பரிசுகளும் குவிந்தன.
யார் இவர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை திருவான்மியூரில் இயங்கும் ப்ரீடம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்.சுந்தர் கூறியதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கு, உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்பதைவிட, என்னால் என்ன செய்ய முடியும் என்று, என்னையே நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க உருவாக்கப்பட்ட, இந்த அறக்கட்டளையின் சார்பில், உடல் ஊனமுற்றவர்களுக்கு, நிறைய உதவி செய்து வருகிறோம், அதன் ஒரு கட்டம்தான் இந்த இசைக்குழு. மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உள்ள திறமைகளின் அடிப்படையில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதை செய்து வருகிறோம்.
அப்படி பாடுபவர்கள், ட்ரம்ஸ் இசைப்பவர், கீபோர்டு வாசிப்பவர் என்று, முழுக்க முழுக்க பார்வையற்றவர்களைக் கொண்டதுதான் "தர்ஷன்' இசைக்குழு. இந்த குழுவினர் அற்புதமாக கர்நாடகா இசைக் கச்சேரியும் செய்வர், திரைப்படப் பாடல்கள் பாடவும் செய்வர்.
பார்வையற்ற குழந்தையாகிவிட்டதே என்று நித்தமும் சோகத்தில் ஆழ்ந்திருந்த இவர்களது பெற்றோர்களுக்கு, இந்த குழந்தைகள் பாடி பரிசும், பணமும் பெற்றுவரும்போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதை வார்த்தையில் கொண்டு வர முடியாது .
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.