Advertisement
சமயபுரம் அம்மன் கோவிலில் பெண் குழந்தை நேர்த்திக் கடன்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012,23:29 IST

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் அருகே, அனாதையாக விடப்பட்ட, நான்கு மாத பெண் குழந்தை, நேர்த்திக் கடனாக செலுத்தப் பட்டிருக்கலாம் என்ற தகவலால், பரபரப்பு நிலவுகிறது.திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணியளவில், கோவிலின் மாவிளக்கு மண்டபத்தில் உள்ள உண்டியல் முன், பிறந்து நான்கு மாதமே ஆன, ஒரு பெண் குழந்தை, அனாதையாக கிடந்தது. அக்குழந்தையை, கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் ஒப்படைத்தனர்.கோவிலில் பலமுறை, "மைக்' மூலம் அறிவிப்பு செய்தும், யாரும் குழந்தையை பெற முன்வரவில்லை. இதையடுத்து, சமயபுரம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்; மருத்துவமனையிலேயே குழந்தை பராமரிக்கப்படுகிறது. சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்."நீண்ட நாள் குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பிறந்தால், அம்மனுக்கே குழந்தையை நேர்ந்து விடுவதாக, வேண்டுதல் செய்வர். குழந்தை பிறந்தவுடன், அம்மனிடம் நேர்ந்து விட்டு, மீண்டும் குழந்தையை தத்து வாங்கிக் கொள்வர்.
இந்த நடைமுறை தெரியாதவர்கள், அம்மனுக்கு நேர்த்திக் கடனாக குழந்தையை உண்டியல் அருகே விட்டுச் சென்றிருக்கலாம் என, சில பக்தர்கள் தெரிவித்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (9)
tamil paravai - RIYADH,சவுதி அரேபியா
11-டிச-201223:33:58 IST Report Abuse
tamil paravai மூடநம்பிக்கை இவர்கள் இன்னும் மாடார்கள் ஆக இருகிறார்கள்.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
11-டிச-201222:21:26 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM எந்த தாயும் பத்து மாதம் சுமந்து தான் பெற்ற குழந்தையை இப்படி செய்ய மாட்டாள்...அது போல செய்ய யாருக்கும் மனதும் வராது....இதை பார்த்தால்....சாப்பிடவே வழி இல்லாத குடும்பம் ...குழந்தையும் வய்து யபடி பிழைப்பது என்ற ஒரு வேதனையில் ...இப்படி நடந்திருக்கும் யன்று தோனுகிறது ....அவளும் அதே கோவிலில் இருந்து பார்த்து இருபால் அந்த குழந்தையை யார் யடுத்து சென்றார் யன்று ... ????
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Subburajpiramu Subburaj - Srivilliputtur,இந்தியா
11-டிச-201213:30:14 IST Report Abuse
Subburajpiramu Subburaj எப்படி இப்படியெல்லாம் மனசு வருகிறது
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
arabuthamilan - Manama,பஹ்ரைன்
11-டிச-201211:33:19 IST Report Abuse
arabuthamilan முறை தவறி பிறந்த குழந்தையாகவும் இருக்கலாம்...(மன்னிக்கவும்)
Rate this:
14 members
1 members
23 members
Share this comment
mirudan - kailaayam,இந்தியா
11-டிச-201210:38:27 IST Report Abuse
mirudan கடவுள் நம்பிக்கை தேவை தான் ஆனால் பிறந்து நான்கே மாத குழந்தைக்கு தெரியுமா ? ஒரு வேளை நாய் அதை கடித்து குதறி இருந்தால் ? அந்த குழந்தையின் நிலை என்ன ஆயிருக்கும்
Rate this:
1 members
1 members
24 members
Share this comment
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
11-டிச-201210:27:10 IST Report Abuse
v.sundaravadivelu பிறந்த குழந்தையை இப்படி அனாதையாக ஓர் பொது இடத்தில் போட்டுவிட்டு செல்கிற இந்தமாதிரி ஈன ஜென்மங்கள் எப்படி பத்து மாதங்கள் பொறுமையாக வயிற்றில் சுமந்து திரிந்தன என்கிற ஓர் ஆச்சர்யம் எப்போதும் எனக்குண்டு... துயர்களும் சங்கடங்களும் வறுமையும் பொருளாதார பலவீனங்களும் இவ்விதமாகவெல்லாம் கூட நடப்பதற்கு தூண்டுகோலாக அமைந்து விடுவதுண்டு... இதற்கெல்லாம் லட்சம் கோடி சாமிகள் வந்தாலும் காப்பாற்ற முடியுமென்றே தோன்றவில்லை..
Rate this:
0 members
0 members
33 members
Share this comment
srinivasansulochana - newsouthwales,ஆஸ்திரேலியா
11-டிச-201202:43:36 IST Report Abuse
srinivasansulochana குழந்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும், நன்றாக உடுத்தியும் இருப்பதில் இருந்து ஏதோ தவறுதலாக விட்டிருப்பது தேர்கிறது. சீக்கிரமே வந்து பெற்றுக்கொள்வர்
Rate this:
1 members
1 members
20 members
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
11-டிச-201202:27:28 IST Report Abuse
Kunjumani இந்த குழந்தையின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்தல் நம் மனகஷ்டமெல்லாம் பறந்துவிடும். அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் போலும்..இந்த குழந்தையை அனாதையாக விட்டு செல்ல எப்படி மனம் வந்தது... சூரியனுக்கே டார்ச்சா என்பார்கள், அந்த பாணியில் அம்மனுக்கு, தெய்வத்தையே நேர்த்திக்கடனாக செலுத்துவதா?
Rate this:
0 members
1 members
44 members
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
11-டிச-201201:21:31 IST Report Abuse
GOWSALYA இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் : ஏமாறுவார் இந்த நாட்டிலே ????????..........கடைசியில் கடவுளையும் ஏமாற்றத் துணிந்துவிட்டார்கள்.
Rate this:
1 members
0 members
38 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.