Advertisement
"கல்லறை செல்லும் வரை அ.தி.மு.க.,வில் இருப்பேன்' :நாஞ்சில் சம்பத் உருக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2012,23:44 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 14,2012,00:43 IST

சென்னை: ""கல்லறைக்குச் செல்லும் வரை, அ.தி.மு.க.,வில் நீடிப்பேன்,'' என, நாஞ்சில் சம்பத் பேசினார். ம.தி.மு.க.,வில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், சமீபத்தில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு, கட்சியின், துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., பொதுக் கூட்டங்களில் பேசப் போவதாக சம்பத் அறிவித்தார். அவரின் முதல் பொதுக் கூட்டம், அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில், சென்னை, மயிலை மாங்கொல்லை திடலில், நேற்று நடைபெற்றது. இதில், சம்பத் பேசியதாவது: ஒரு காலை இழந்தவன், இன்னொரு காலை நேசிப்பதைப் போல, நான் அ.தி.மு.க.,வை நேசிக்கிறேன். ஏற்கனவே இருந்த இயக்கத்தில் கிடைத்த கசப்புகளை, கசக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறேன். இனி, அந்த இயக்கத்தைப் பற்றியோ, அதன் தலைமையைப் பற்றியோ, விமர்சிக்க மாட்டேன். அ.தி.மு.க., சிறப்புகளைப் பற்றியும், இந்த ஆட்சிக்கு கருணாநிதி கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் விரிவாகப் பேசுவேன். கருணாநிதி, இந்த ஆட்சிக்கு தோள் கொடுக்க முடியாவிட்டாலும், தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும். காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்றவற்றில், தமிழகத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், துரோகத்தை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் இன்று நிலவும், மின் வெட்டுக்கு காரணம், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., ஆட்சி தான். மத்திய அரசிடம் உபரியாக இருக்கும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல், தடை செய்கிறார். மத்திய அரசில், வலுவாக இருக்கும் தி.மு.க., தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்கு, உதவி செய்யாமல், தடையாக நின்று வருகிறது. கட்சியிலும், ஆட்சியிலும், குடும்பத்தினரை முதன்மைப்படுத்தவே, கருணாநிதி விரும்புகிறார். "நான் தி.மு.க.,வில் சேரப் போகிறேன்' என, பொய் பிரசாரத்தையும் மேற்கொண்டனர். என் உயிருள்ள வரை, நான் அ.தி.மு.க.,வில் தான் இருப்பேன். தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடுவேன். இவ்வாறு அவர் பேசினார். இலக்கிய அணி செயலரும், சமூக நலத்துறை அமைச்சருமான வளர்மதி, கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சென்னை மேயர் சைதை துரைசாமி, எம்.பி., ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் செந்தமிழன், ராஜலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (123)
சாமி - மதுரை,இந்தியா
20-டிச-201201:40:01 IST Report Abuse
சாமி அ தி மு க "கல்லறைக்குச் செல்லும் வரையா??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ponnambalam s - CHENNAI,இந்தியா
14-டிச-201217:12:39 IST Report Abuse
ponnambalam s சம்பத்தை குறை கூறுவது தவறு. அவர் 4 மாதங்கள் வைகோவிடம் சந்திக்க அனுமதி கேட்டும் அவரை உதசீனபடுதியது வைகோவே. வைகோ இவளவு தூரம் தவறாக நடந்திருக்க கூடாது. மீண்டும் கூறுகிறேன் 20 வருடங்கள் உங்களோடு இருந்த இவர் என்ன தவறு செய்தற் என்று வைகோ இன்னும் கூறவில்லை. வைகோவே உங்கள் கொள்கைபிடிப்பு யாவரும் அறிவர். ஆனால் உங்கள் வீம்புதான் புரியவில்லை. வாழ்க சம்பத். "தமிழருவி திருப்பிவிடப்பட்டுள்ளது" .
Rate this:
5 members
0 members
2 members
Share this comment
balagiri - Chennai,இந்தியா
14-டிச-201200:02:45 IST Report Abuse
balagiri எதற்கு உங்க ஆயுசை குறைத்து கொள்கறீர்கள்?
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
13-டிச-201217:16:45 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இந்த போட்டோவை பாருங்கப்பா... நம்ம சொர்னாக்காவே.. என்னமா ரசிச்சி இந்த பேச்சை கேக்குறதை.. சூப்பர் அண்ணே.. வாழ்த்துக்கள். அப்படியே இந்த கட்சியில் ஓரமாகன் ஒக்காந்திருக்கும். முன்னாள் திமுக, மதிமுக பேச்சாளர்.. சிதம்பரம் ஜெயவேல் அவர்களையும் சேர்த்து அழைத்து கொள்ளுங்கள்... நன்றாக இருக்கும், விசிலடிசாம் குஞ்சுகளும்., மிக ரசிப்பார்கள்.
Rate this:
2 members
1 members
18 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
13-டிச-201216:56:26 IST Report Abuse
KaNaGaRaJ. S... எவ்வளவோ வெட்கம் கெட்ட கேடு கேட்ட மதி கெட்ட மானம் கெட்ட அரசியல் வாதிகளுக்கு மத்தியில் 20 வருடங்களாக வை கோவுடன் இணைந்து தமிழக மக்களுக்காக குரல் ( பணத்துக்காக என்றாலும் ) கொடுத்ததோடு இல்லாமல் சிறை போராட்டம் என தமிழக மக்களின் வாழ்வாதார பிரசினகளுக்காக பல தியாகம் செய்ததை யாராலும் மறுக்க முடியுமா இல்லை யாராவது தெருவில் இறங்கி போராடத்தான் வருவார்களா. அப்படி பார்க்கும் போது இவர் எவ்வளோ தேவலை. அப்படி பட்ட நல்ல மனிதரை போய் கல்லறைக்கு எப்போது போவார் மாலை ரெடி என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்கள் முதலில் நெஞ்சில் கை வைத்து தமிழக அரசியல்வாதிகளில் நல்ல அரசியல்வாதிகள் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களை பாத்து பேரை வரிசை படுத்த சொல்லுங்கள். முதல் ஐந்து பெயருக்கே ஆள் கிடைக்காது. எதோ அவருக்கு என்று உண்டான வேலையை பார்த்து காலத்தை ஓட்டுகிறார். அப்படி கசபுணர்வுடன் வெளியே வந்தாலும் வைகோ வை பற்றியோ ம தி மு க வை பற்றியோ எந்த தகாத வார்த்தையும் பேச வில்லை என்பதிலே தெரிகிறதே அவர் ஒரு நல்ல மனிதர் என்பதற்கு. நான் சொன்ன கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் நண்பர்களின் கருத்தை ஆவலுடன் எதிர் பார்கிறேன்
Rate this:
28 members
3 members
32 members
Share this comment
Ravichandran - dar salam ,தான்சானியா
13-டிச-201216:42:00 IST Report Abuse
Ravichandran இதோடா வந்துடருபா வடிவேலு பிரதார். ஒன்னு தெரியுது பா, வை கோ பிழைக்க தெரியாத மனுஷன், நீங்க உஷார் கூட்டம்.
Rate this:
3 members
1 members
19 members
Share this comment
Periasamy Thuran - basra,ஈராக்
13-டிச-201215:40:35 IST Report Abuse
Periasamy Thuran தன்மான தமிழா, இதெல்லாம் நடக்கிற காரியமா. அங்கேயும் இதையேதான் சொன்னீங்க. நீங்களாவுது வித்தியாசமா இருப்பீங்கன்னு பார்த்தா நீங்களும் அரசியல்வாதின்னு நிரூபிசிடீங்க.
Rate this:
2 members
0 members
15 members
Share this comment
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
13-டிச-201215:39:36 IST Report Abuse
Rangarajan Pg இந்த மாதிரி கட்சி தாவும் அரசியல் வாதிகள் ஒரே டயலாக்கை எழுதி வைத்து கொண்டு அடிக்கடி ADDRESSEE பெயரை மட்டும் மாற்றி கொள்வார்கள் போல இருக்கிறது. MAY BE இவர் இதே வசனத்தை தான் அப்போது மதிமுகவில் சேரும்போது கூறி இருப்பார். அதற்கு முன் எந்த கட்சியில் இருந்தாரோ அப்போதும் இதையே தான் கூறி இருப்பார். தற்போது ஜெயலலிதா புகழ் பாடுவதற்கு பணிக்கபட்டிருக்கிறார். பார்க்கலாம் எவ்வளவு நாளைக்கு என்று. அடுத்த ADDRESSEE யாரோ??
Rate this:
3 members
0 members
18 members
Share this comment
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
13-டிச-201215:37:35 IST Report Abuse
மோனிஷா தமிழுக்கு சோதனை வராமல் இருந்தால் சரி.
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
13-டிச-201215:37:25 IST Report Abuse
மோனிஷா ரொம்ப உணர்ச்சி வசப்படாதீர்கள். சில மாதங்களாவது பொறுத்திருங்கள்.
Rate this:
1 members
0 members
18 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.