திருநெல்வேலி:ஆன்லைன் கவுன்சிலிங்கில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக அனைத்து ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொது செயலாளர் கிப்சன்
தெரிவித்துள்ளதாவது:நெல்லை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள்
140க்கு மேற்பட்ட இடங்களில் 81 பணியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டு ஆன்லைன்
கவுன்சிலிங் நடந்துள்ளது. இதனால் இந்த பணியிடங்கள் முறைகேடாக நிரப்ப
வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.மேலும், கடந்த 2009ம் ஆண்டு மாநில சீனியாரிட்டி அடிப்படையில் வெளி
மாவட்டங்களில் பணிபுரிகிறவர்களுக்கு பணி மாறுதல் கிடைக்க எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பெரிதும் பாதிக்கப்பட்டு
வருகின்றனர். பணி மாறுதல் கவுன்சிலிங் நடந்த பின்பு புதிய நியமனம்
செய்யப்பட்டிருந்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.எனவே, இதுதொடர்பாக தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாய்ப்பு இல்லையா ஒரு இடத்துக்கு நாலரை லட்சம் விலை பேசுறாங்க. எனக்கு வயிறு எரியுது. கஷ்ட்டப்பட்டு படிச்சு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் காசு கொடுக்காமல் வேலைக்கு வந்தா இது தான் கதியா. வீட்ட விட்டு புள்ள குட்டிய விட்டுட்டு திருநெல்வேலிலேருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிடம் கிடைத்த பெண்ணின் கதறலை இங்கு பதிவு செய்திருக்கிறேன். பிணத்தின் வாயிலிருந்து அரிசியை தின்னும் கழுகுகளுக்கும் இது போன்ற வயிதேரிச்ச்சலை கொட்டி கொண்டிருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்????

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.