சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின், பாதுகாப்பிலிருந்த எஸ்.ஐ.,யை, அ.தி.மு.க.,கவுன்சிலர் கன்னத்தில்அறைந்தார். இதனால்,இரு தரப்பினரிடையேமோதல் ஏற்படும் நிலைஏற்பட்டது.
நாஞ்சில் சம்பத்தின்ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி,சென்னை கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்தது.அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மூத்தநிர்வாகிகள் உள்ளிட்டபலர் வந்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவந்த காரை, மீண்டும்அவர் செல்வதற்கு ஏதுவாக, திருப்பி நிறுத்தும்பணியை, போலீசார்செய்து கொண்டிருந்தனர்.அப்போது, அங்கிருந்தவர்களை விலகிச் சென்று, காருக்கு வழிவிடுமாறு, போலீசார் கூறிக்கொண்டிருந்தனர். அப்போது, மேயர்சைதை துரைசாமியுடன், மாநகராட்சி கவுன்சிலர் சின்னையன், இடையில்புகுந்து வந்தார். இவரை,ஒதுங்குமாறு கூறியஎஸ்.ஐ., செல்லதுரை,விலகுமாறு தள்ளிஉள்ளார்.
இதனால் கோபமடைந்த சின்னையன்,எஸ்.ஐ., செல்லதுரை கன்னத்தில், "பளார்' என,அறைந்தார். திக்குமுக்காடிய, எஸ்.ஐ., சின்னையனை மீண்டும் தள்ளினார். இருதரப்பினருக்கும் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, காரசாரமாக பேசத் துவங்கினர்.அருகில் இருந்த போலீசார், இருவரையும் பிரித்துஅழைத்துச் சென்றனர்.முதல்வர் ஜெயலலிதா,கட்சி அலுவலகத்துக்குள்இருக்கும்போது, இப்பிரச்னை வெளியில்நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, "கூட்டத்தில் தெரியாமல் நடந்துவிட்டது. பிரச்னையைபெரிதுபடுத்தாதீர்கள்' என, சின்னையன், போலீசாரிடம் மன்றாடினார்.ஆனால், சின்னையன் அடித்தது குறித்து, முதல்வரிடம் முறையிடப்போவதாக, பாதுகாப்பு போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.
ஜெயலலிதா சென்ற "லிப்ட்' மக்கர்:
அ.தி.மு.க., தலைமையகத்துக்கு ஜெயலலிதாவரும்போது, அங்குள்ள "லிப்டி'ல் தான் செல்வார். அவருக்காக மட்டுமே "லிப்ட்' இயக்கப்படும். மற்றநேரங்களில், "லிப்ட்' "ஆப்' செய்து வைக்கப்பட்டிருக்கும். தலைமையகத்துக்கு, ஜெயலலிதா நேற்று வந்தபோது, "லிப்டி'ல் செல்ல பட்டனை அழுத்தினார்."லிப்டி'ன் கதவு திறப்பதும், மூடுவதுமாக இருந்ததே தவிர, இயங்கவில்லை. உடனே, அங்கிருந்தஅலுவலக மேலாளர் மகாலிங்கத்தை அழைத்தார்.அவரும், பட்டனை அழுத்திப் பார்த்தும், "லிப்ட்'கதவு முழுமையாக இயங்கவில்லை. சில நிமிடங்களில், மீண்டும் ஒழுங்காக இயங்கத் துவங்கியது.வழக்கமாக, ஜெயலலிதா மட்டுமே, "லிப்டி'ல்சென்று வருவார். நேற்று, மேலாளர் மகாலிங்கத்தையும், உடன் வருமாறு "லிப்டி'ல் அழைத்துச் சென்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காவலதிகாரியை கை தொட்டு அடித்தது கவுன்சிலர் செய்த பெரிய தவறு தான். ...காவல்துறையினர் முடிந்த அளவு யாரையும் கை வைத்து தள்ளாமல் கூட்டத்தை கட்டுபடுத்த முயற்சிக்கலாம். தள்ளப்பட்டவர் தன்னை மறந்து காவல் அதிகாரி என்றும் பாராமல் தன அனுச்சை செயலுக்கு ஆட்பட்டு அடித்திருக்கிறார்....உடம்பில் கை வைக்கப்பட்டு பழக்கபடாதவராக க இருக்கலாம். ...காவல் துறையினரும் கூட்டங்களை கட்டுபடுத்த ஒரு வரைமுறை வைத்திருக்க வேண்டும்...ஆட்சியிருகிற அகம்பாவத்தால் கவுன்சிலர் அடித்தார் என்றால் நடவடிக்கை தேவையானது. ...
அம்மா ஆட்சியில் கவுன்சிலருக்கே இவ்வளவு தைரியம் என்றால்.........அடேங்கப்பா.....வாழ்க தமிழகம்ஆமா எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை ஐயா,போலீஸ்காரர்களை பத்தி கமென்ட் எழுதினால் மதுரை முனியாண்டிக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது ஏன்?போலீஸ்காரர்கள் எல்லோரையும் அப்படி ஏசுவது இல்லை தெருப்பொறுக்கி களைத்தான் அப்படி ஏசுவார்கள் என்று வக்காலத்து வாங்கி இருக்கிறார்.அப்படி என்றால் கவுன்சிலர் சின்னையனும் தெருப்பொறுக்கியா?மீண்டும் வாழ்க தமிழகம்
ஹலோ, திருடன் திருடினாலோ, அல்லது ஒரு எஸ்.ஐ.-யை ஒருவன் கொலை செய்ததற்கோ உடனே அம்மா ஆட்சியில் ஒரு திருடனுக்கு எவ்வளவு தைரியம், ஒரு கொலைகார ரவுடிக்கு என்ன தைரியம் என்று கேட்டுக்கொண்டே போவீர்கள் போல..ஒரு போலீஸ்காரரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாரென்றால் அது அந்த தனி மனிதனின் வரையறையற்ற செயலே அன்றி அதற்கெல்லாம் ஒரு முதல்வர் பொறுப்பேற்க முடியாது. நீங்கள் இந்த செய்தியில் இருக்கும் பின்வரும் வரிகளை பூதக்கண்ணாடி கொண்டு படித்துவிட்டு பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள். ""ஜெயலலிதா,கட்சி அலுவலகத்துக்குள் இருக்கும் போது, இப்பிரச்னை வெளியில் நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, "கூட்டத்தில் தெரியாமல் நடந்து விட்டது. பிரச்னையை பெரிது படுத்தாதீர்கள்' என, சின்னையன், போலீசாரிடம் மன்றாடினார்.ஆனால், சின்னையன் அடித்தது குறித்து, முதல்வரிடம் முறையிடப்போவதாக, பாதுகாப்பு போலீசார் முடிவு செய்துஉள்ளனர்."" இதுவே வேறு ஆட்சியாக இருந்திருந்தால் இப்படி போலீசார் முடிவெடுக்க முடியுமா? போலீசார் இந்த சம்பவம் குறித்து முதல்வரிடம் முறையிட்டால், முறைதவறிய கவுன்சிலருக்கும் அவரது கோஷ்டிக்கும் முயையான 'கவனிப்பு' நிச்சயம் என்பதை உணருங்கள்....
ஒரு எஸ்.ஐயை அடிக்கின்ற அளவுக்கு கவுன்சிலர் போககூடாது. எஸ்.ஐ தன்னை பிடித்து தள்ளியிருந்தாலும், அவர் தன் கடமையை நிறைவேற்றத்தான் அச்செயலை செய்தார் என கொள்ளவேண்டும். முதல்வருக்கு பாதுகாப்பு கொடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை செய்ய அவருக்கு அதிகாரம் உள்ளது. இங்கு கருத்து சொன்ன பலரும் கருணாநிதியை போல ஜெயலலிதாவை நினைத்துகொண்டு கருத்து சொல்லியுள்ளார்கள். தன் கட்சியில் எவ்வளவு முக்கிய பொறுப்பில் உள்ளவர் தவறு செய்தாலும், தயக்கமென்பதே இல்லாமல் உடன் நடவடிக்கை எடுக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது நட்டு மக்கள் அறிந்ததே. அந்த கவுன்சிலருக்கு தான் நேரம் சரியாக இல்லை என்று கருதுகிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரி , முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்றால் தனக்கு நீதி வழங்கவேண்டும் என்று முறையிட்டால் , நிச்சயமாக நீதி கிடைக்கும்.
இது போன்ற நிகழ்ச்சிகளில் வேறு பல நாடுகளின் பழக்கம் காவலரை அடித்தவர் அமைச்சரானாலும் கூட அவரை சட்டத்துக்கு உட்படுத்துவது. பின்னர் அதனை முதல்வரிடம் தெரிவிப்பது. அதனை அம்முதல்வர் பாராட்டுவர். இந்தியாவிலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலில் ஈடுபட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை எல்லோரும் சட்டத்தையும் அதனைச் செயல்படுத்தும் காவலர்களையும் மதித்தனர்.பரங்கியர்களின் காவலர்களை மட்டுமே எதிர்த்தனர் வீரத்துடன் 65 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில்.
மாநில கல்லூரியில் ஒரு எஸ் ய் இன் அவமானத்திர்க்குத்தானே ஸ்டாலின் மிசா நேரத்தில் வாய் கிழிய,கிழிய அடிவாங்கினார்,அதை இந்த மாமன்ற உறுப்பினர் அறிந்தால் இப்படி செய்திருக்க மாட்டார்.சரி இவருடைய வாய்,அல்லது காத்து,கை,கால் எதை இழக்க உள்ளாரோ ,ஆனானப்பட்ட தாத்தாவே ஐயோ கொல்றாங்களே, குத்துரான்களே,கொளைபன்றான்களே,என்னை காப்பாற்றுங்கள் என ஓலமிட்டது இவருக்கு தெரியாமல் இருக்காது,பாவம் வண்டுமுரகனின் கதைதான் இவருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.