நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உலகப்பிரசித்தம் பெற்றது. எல்லா சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து அன்னை மரியாவை வணங்கிச் செல்கின்றனர்.
வேளாங்கண்ணி மாதாவை சிறப்பிக்கும் வகையில் "அன்னை வேளாங்கண்ணி' என்ற திரைப்படம் எடுத்த போது, மாதா மீதிருந்த பக்தியின் காரணமாக, அந்த படத்திற்கு சம்பளம் வாங்காமலே நடித்துக்கொடுத்ததாக, கடந்த வாரம் கூட முதல்வர் ஜெயலலிதா ஒரு விழாவில் கூறியிருந்தார்.
ஆனால் முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில், கிறிஸ்தவர்களின் தமிழ்க்கடவுளான வேளாங்கண்ணி மாதா கோவில் அமைந்திருக்கிறது என்ற தகவலை, மதுரை பத்திரிகையாளர் இதயகுமார் படங்களுடன் பகிர்ந்து கொண்டபோது ஆச்சர்யமாக இருந்தது.ஆச்சர்யத்திற்கு காரணம் அந்த ஆலயம் தமிழகத்தில் உள்ள இந்துக்களின் கோபுர வடிவில் அமைந்திருப்பதும், அதனை வடிவமைத்து கட்டியவர் தமிழ்நாட்டைச் சார்ந்த பாதிரியார் என்பதும்தான். இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போமா.
தமிழ்நாட்டில் இருக்கும் தேவாலயங்கள் எல்லாம் ஐரோப்பிய நாட்டு கோபுரங்களின் சாயலை தாங்கி நிற்கும் போது, வெளிநாட்டில் முதன் முதலாக கட்டப்படும் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தை ஏன் தமிழ் கலாச்சாரத்துடன் அமைக்கக்கூடாது என்று எண்ணினார்.
இந்த தேவாலயத்தின் முதல் மாடத்தில் மட்டுமே வழிபாடுகள் நடக்கின்றன. கீழ் மண்டபம் மதங்களின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தியான மண்டபமாக செயல்படுகிறது. கதவுகளே இல்லாமல் எப்போதும் திறந்திருக்கும் இந்த மண்டபத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமில்லாது இந்துக்களும், புத்த மதத்தினரும் கூட வந்து அமைதியாக தியானம் செய்து விட்டு செல்கிறார்கள்.
மேற்கண்ட தகவலை சொன்னவர் இந்த தேவாலயத்தின் பாதிரியார் ஜேம்ஸ் சிங்கராயர். இப்போது இவரது பெயர் ஜேம்ஸ் பாரதபுத்ரா.
அந்த "பாரத புத்ரா' பெயருக்கு பின்னால் ஒரு சின்ன சுவராசியம், அதையும் அவரே சொல்கிறார், 1988ல் 'குடியுரிமை பெற்றால்தான் இந்தோனேஷியாவில் தொடர்ந்து நீடிக்க முடியும்' என்ற புதுச் சட்டம் வந்தது. சரியென நானும் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். ஆனால் 'இந்தோனேஷிய பெயரைத்தான் பதிவு செய்ய முடியும்' என்று கூறி விட்டனர். பாரதம், புத்திரன் போன்ற வார்த்தைகள் எல்லாம் இங்கும் உண்டு. எனவே இந்தோனேஷிய குடிமகனாக மாறினாலும், பாரதத்தின் புத்திரனாகவே இருப்போம் என முடிவெடுத்து பாரதபுத்ரா ஆனேன்'' என்று சிரித்தபடி சொன்னார் பழைய ஜேம்ஸ் சிங்கராயர். இவருடன் தொடர்பு கொள்ள: 62-8163141172., 62-8163141172.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.