சென்னை:"மின்வெட்டு பிரச்னை குறித்து, தமிழக அரசு, வெள்ளை அறிக்கை அளிக்க முன் வருமா' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:மின்துறை அமைச்சர் பேசுகையில், "ஜூன் மாதத்திற்கு பின், மின் தட்டுப்பாடு என்பது வானத்தில் இருக்கலாம். தமிழகத்தில் இருக்காது' என்றார்.ஆனால், தமிழக முதல்வரோ, கடந்த ஆண்டு, கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கையில், "தற்போதுள்ள, 3 மணி நேர, மின்வெட்டை, 2 மணி நேரமாகக் குறைப்போம், 2011ம் ஆண்டு, ஜூலை முதலே, தமிழகத்தில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும்' என்றார்.
அதே முதல்வர், கடந்த மாதம் கூறுகையில், "2013ம் ஆண்டு இறுதிக்குள், மின் பற்றாக்குறை தீர்க்கப்படும் என, கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது உண்மையா? அமைச்சர் கூறியது உண்மையா?தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய, முன்னாள் தலைவர் கபிலன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "இன்னும் இரண்டு ஆண்டுகளில், மின்சாரத் தேவையில், தன்னிறைவு பெற்ற மாநிலமாக, தமிழகம் விளங்கும்' என, கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது உண்மையா? மூத்த அதிகாரி கூறியது உண்மையா?
தமிழகத்திலே, மின்வெட்டுப் பிரச்னை எப்போதும் நீங்கும்? கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் துவங்கப்பட்ட மின்திட்டங்கள் குறித்த, உண்மை விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், அரசு வெள்ளை அறிக்கையை, அளித்திட முன் வருமா?இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உண்மையான நிலவரம் பற்றி ஆறு வாரங்களுக்கு முன், ஒரு ஆங்கில தினசரி பத்திரிகையில், புட்டு, புட்டு புள்ளி விவரம் வந்திரின்ததுசென்ற ஆட்சியில்[இரண்டு முறை] 5% கூட உற்பத்தி அதிகரிக்கவில்லை,
அதே சமயம் தேவை நூறு சதவிகிதம் அதிகரித்து விட்டது இதுதான் பிரச்சினை இதை சரி செய்ய எந்த ஆட்சியாக இருந்தாலும் இன்னும் 15 வருடங்களாகும் ? ஏனெனில் ,தேவை வருடத்திற்கு 20% அதிகரிக்கின்றது இதுதான் உண்மை
நடராசன்.
அட தமிழன் வீணா போக உதவியவரே ,சிங்களனுக்கு காவடி எடுத்தவரே , வெளிநாட்டுக்கு சிகப்பு கம்பளம் விரிப்பவரே ,இன்று பேப்பர் படித்தீரா கோவைக்குள் எந்த ரயிலும் வராமல் பார்த்துக்கொள்ளும் தென்னக ரயில்வேக்கு எதற்கு சென்னையில் தலைமை அலுவலகம். உங்கள் பார்வை எப்போ மக்களின் துயத்தில் படும். நீங்கள் ஒரு வெள்ளை அறிக்கை கொடுப்பீரா.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.