ஊராட்சிகளில் அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில் பட்டியலில் உள்ள, 99 தொழில்களுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சிகளில், அடுத்தடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமலாகும்.
தமிழகத்தில் அபாயகரமானது மற்றும் அருவருக்கத்தக்க தொழில்கள் என அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு, வரி வசூலிக்க 1972ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை, அரசு ஊராட்சிகள் மூலம் அமல்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, வரி வசூல் செய்யப்படுகிறது. இவற்றில் தேநீர்கடைகள், பீடி சுருட்டுதல் உட்பட, பல்வேறு தொழில்கள் அடங்கியுள்ளன.ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக, பல்வேறு வரிகள் வசூலிக்கப் படுகின்றன. அதன் மூலம், கிராமங்களில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. தற்போது ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும், அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில்களுக்கு, புதிய கட்டணத்தை அரசு விதித்துள்ளது.
கடந்த, 2007ம் ஆண்டிற்கு பிறகு, இம்மாத இறுதியில், புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றும்படி, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, உத்தரவிடப் பட்டுள்ளது.அந்த உத்தரவில், 99 தொழில்களுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கேற்ப இரண்டு முதல் மூன்று மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், புதிய வரி அமலுக்கு வரும்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.