தேவாரம் : பெரியாறு அணை பாதுகாப்பு குழு சார்பில், டிச., 21ல் "எழுச்சி நாள்' கொண்டாடி, புதிய கொடி அறிமுகப்படுத்ப்பட உள்ளது. கடந்த ஆண்டு, டிச., 5 ல் முல்லை பெரியாறு அணை பிரச்னை துவங்கியது. குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு ஆகிய கேரளா எல்லையை நோக்கி, பல்லாயிரம் பேர் திரண்டு, போராட்டம் நடத்தினர். டிச., 21 ல், லோயர் கேம்பில் நடந்த முற்றுகை போராட்டத்தை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் வாகனத்தை பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். போலீசார் நடத்திய கல்வீச்சில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் காயமடைந்தனர். பத்திரிகையாளர்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேப்படுத்தப்பட்டன. கூடலூரில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்ததினத்தை நினைவு கூறும் விதமாக, கூடலூரில் "எழுச்சி' நாள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதில், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஜயக்குமார் கலந்து கொண்டு, போராட்ட சி.டி., தொகுப்பை வெளியிடுகிறார். முல்லை பெரியாறு பாதுகாப்பு குழுவிற்காக, வடிவமைக்கப்பட்ட, பச்சை நிறத் துணியில், பென்னிகுக் படம் இடம் பெற்றுள்ள கொடி, அறிமுகப்படுத்தப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.