நமது நாட்டுக்குள் இரு மாநிலங்களுக்கு இடையே தான் நதி நீர் பிரச்னை என்று பார்த்தால், சர்வதேச எல்லைக் கோட்டையும் இப்பிரச்னை விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பிரச்னையால் "தலைவலி' ஏற்பட்டிருக்கும் இந்தியாவுக்கு, அதே நாட்டால் இன்னொரு பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தையும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் பிரிக்கும் 96 கி.மீ., நீளமுள்ள நீர்ப்பரப்பு தான் "சர் கிரீக்'. "ரன் ஆப் கட்ச்' எனவும் அழைக்கப்படுகிறது. அரபிக்கடலின் தொடர்ச்சியாக இருக்கும் இப்பகுதி, பரப்பளவில் சிறிதாக இருந்தாலும், பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிப்பதால், இதை பங்கிட்டுக்கொள்வதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. குஜராத் தேர்தலில் இப்பிரச்னை அதிகம் அலசப்பட்டது.
1968ல் எல்லை பிரிக்கப்பட்டபோது, இரு நாடுகளால் இப்பகுதி பங்கிட்டுக் கொள்ளப்படவில்லை. பச்சை நிற கோடு - தனது பகுதி என பாகிஸ்தான் கூறுகிறது. தற்போது இந்தியா வசம் உள்ளது. சிவப்பு நிற கோடு - தனது பகுதி என இந்தியா கூறுகிறது. தற்போது பாகிஸ்தான் வசம் உள்ளது. சர் கிரீக் பகுதியின் எல்லை முடியும் இடம் தான், இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையின் தொடக்கம். இந்தியா மதிப்பிட்டுள்ள கடல் எல்லைபாகிஸ்தான் மதிப்பிட்டுள்ள கடல் எல்லை இப்பகுதியை இந்தியா விட்டுக்கொடுத்தால் நமக்கு தான் இழப்பு அதிகம். ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவுள்ள இப்பகுதி, எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு, மீன் வளம் மிக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.