மதுரை : கன்னியாகுமரி வெள்ளாங்கோடு மேசியாதாஸ் மகள் ஷர்மின். எம்.இ., படித்த இவர், ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்தார். இலங்கவிளை செல்வராஜ் மகன் ஷாஜின். இவர் சென்னை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். ஷர்மினை, ஷாஜின் ஒரு தலையாக காதலித்தார்.ஷர்மினுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. 2010 பிப்.,16 ல் வீட்டில் தூங்கிய ஷர்மினை வெட்டியதாக, ஷாஜினை அருமணை போலீசார் கைது செய்தனர். ஷர்மின் இறந்தார். ஷாஜினுக்கு நாகர்கோவில் கோர்ட் 2010 டிச.,12 ல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து பெஞ்ச் முன், மனு
விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், "கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஷர்மினை வெட்டியதற்காக, கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.