அண்ணா நகர் : நடைபாதையில் உறங்கிய, ஏழு வயது சிறுமியை கடத்த முயன்ற, வடமாநில வாலிபர், சிறையில் அடைக்கப்பட்டார். அண்ணா நகர் மேற்கு விரிவு, பாடிக்குப்பம் சாலை, அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் பாட்சா, 40, சாந்தி, 32, தம்பதியினர். கோயம்பேடு சந்தை பகுதியில், சிறு சிறு பணிகள் மற்றும் வியாபாரம் செய்துவரும் இவர்கள், தங்கள் மகள், சகாயமேரி, 7, உடன், கோயம்பேடு சந்தை பகுதி நடைபாதையில், கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
கடந்த, 16ம் தேதி இரவு, கோயம்பேடு சந்தை பகுதி நடைபாதையில், பாட்சா, சாந்தி, சகாயமேரி ஆகியோர் உறங்கி கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, மகாராஷ்டிராவை சேர்ந்தத முகமது ஹாஜா, 26, என்ற இளைஞர், சகாயமேரியை கடத்த முயன்றுள்ளார். அங்கு இருந்தவர்கள், முகமது ஹாஜாவிடம் இருந்து சிறுமியை மீட்டு, அவரை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், முகமது ஹாஜாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.