புதுடில்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் கால அவகாசம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டை உலுக்கிய 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடந்தத 1998- முதல் 2009- வரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த காங். எம்.பி. பி.சி. சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக்குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் (ஜே.பி.சி.) நியமிக்கப்பட்டது. இக்குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளனர். ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் ஜே.பி.சி.யின் பதவி காலம் வரும் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நான்காவது முறையாக இக்குழுவின் பதவி காலம் 2013-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.