குஜராத் தேர்தல் :
குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 71.32 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. தேர்தல் தேதி அக்டோபர் 4ம் தேதி தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெறும் ஓட்டு எண்ணிக்கை 33 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்களுக்கு இடையே நடைபெறும் இந்தமோடியின் வெற்றி வாய்ப்பு:
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்து கணிப்பு தேர்தலுக்கு முன் 60 தொகுதிகளில், 239 இடங்களில் நடைபெற்றது. இதில் 3755 பேர் பங்கேற்றனர். கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் 2002 மற்றும் 2007ம் ஆண்டு தேர்தல்களை விட இம்முறை அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில் மோடி வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளனர். பா.ஜ., விற்கு ஆதரவாக 48 சதவீதம் பேர் இந்த கருத்து கணிப்பில் வாக்களித்துள்ளனர். மேலும் பா.ஜ., 129 முதல் 141 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரசிற்கு ஆதரவாக 36 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் 37 முதல் 45 இடங்களில் வெற்றி பெறம் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.மக்களின் முடிவுக்கு துமால் ஓகே .,
இமாச்சல பிரதேச மக்களின் முடிவை வரவேற்பதாக அம்மாநில முதல்வர் பிரேம் குமார் தூமல் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ளன. இதில் ஆளும் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் பிரேம் குமார் தூமல், "மக்களின் முடிவுகள் எப்போதுமே சிறந்ததாகத் தான் இருக்கும். அவர்கள் எங்களை ஆதரித்தால் அது நல்லது. அவ்வாறு இல்லாவிட்டாலும் நல்லதே. பொதுமக்களின் முடிவை நான் வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திரு மோடியின் 3வது தொடர் வெற்றியின் மூலம், பிஜேபியின் மூத்த தலைவர்கள் கலந்தாலோசித்து, வரும் 2014 தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அருணாச்சலில் சீனாவின் தலையீடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வளர்ந்து வரும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர் கொள்ள திரு. மோடி போன்ற, திடமான கொள்கை, வளர்ச்சி பணிகளை திட்டமிடல், தொலைநோக்கு பார்வை உள்ளவர்கள்தான் வேண்டும் எதிர்கால இந்தியாவிற்கு.
2014ஆம் ஆண்டின் பாரத பிரதமர் அவர்களே உங்களை வரவேற்கிறோம். இன்றைய குஜராத்தின் வெற்றி நாளைய இந்திய வெற்றியாக மாறவேண்டும். ஊழல் நிறைந்த இந்த சமூகத்தை மாற்றி நல் வழியில் இந்தியா முன்னேற தங்களின் வெற்றி அச்சாரமாக அமைய வேண்டும். ஆட்சியை வேறு ஒரு நல்லவரிடம் ஒப்படைத்து நாட்டில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். நாட்டை அந்நிய சக்திகளிடம் இருந்தும், மதவாதம் விரைவாதம் என்று பேசி மக்களை பிரிக்கும் சோனியா கும்பலிடம் இருந்து காப்பாற்ற விரைந்து வர வேண்டும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.