Advertisement
பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2012,15:13 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 20,2012,19:49 IST

சென்னை: இசையின் லாவகத்தினால் கோடிக்கணக்கானவர் உள்ளத்தை கொள்ளை கொண்ட பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று அடையாறு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இசையில் மயக்கும் தன்மை கொண்டவர்:






பிரபல சங்கீத மேதை டி. கே., பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ. இவரது தந்தை மிருதங்க வித்வான் ஆவார். தந்தையும் ,மகளும் மேடையில் இருந்தால் கச்சேரி களை கட்டி விடும். அசையாத உள்ளம் கொண்டவர்களின் கைகளும் தாளம் போடத்துவங்கி விடும். உலகம் முழுவதும் உள்ள பிரபல சபாக்களில் கர்நாடக கச்சேரி நடத்தி வந்தார். மேடையில் இவர் அமைந்து ஆலாபனையுடன் தனக்கே உரிய பாணியில் முகத்தை மாற்றி கைகளை உயர்த்தி ராகம் பிடிக்கும் போது மயங்காத உள்ளங்களும் மயங்கி நிற்கும். மேடையில் தனது கச்சேரி முடியும் வரை அனைவரையும் தனது இசை தன்மையால் அசைய விடாமல் கட்டிப்போட்டு விடுவார்.

இவரது கர்நாடக இசை வல்லமைக்கும் மேலாக சினிமாவிலும் அவ்வப்போது பாடி வந்தார். இந்த மாதம் மார்கழி என்பதால் வரிசையாக கச்சேரி புக் ஆகியிருந்தது. இந்நிலையில் கணவர் மகாதேவன் மதியம் ஒரு மணியளவில் தனது காரில் ஏறி வெளியே புறப்பட்டார். கோட்டூர் புரத்தில் இருந்து அடையாறு நோக்கி சென்றார். கோட்டூர்புரம் பாலத்தில் காரை நிறுத்தினார். பின்னர் இந்தஆற்றில் குதித்து அங்கேயே உயிரை மாய்த்து கொண்டார். இவர் ஆற்றில் விழுந்ததை அக்கம் பக்கம் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பிணத்தை மீட்டு மகாதேவன் தான் என உறுதி செய்தனர்.



இந்த தகவல் நித்யஸ்ரீக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்ட அதிர்ச்சியில் நித்யஸ்ரீ சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு கணவர் பிணத்தை பார்த்து கதறி அழுதார். மகாதேவன் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (120)
lnsomesh - TEMA ,கானா
23-டிச-201202:23:57 IST Report Abuse
lnsomesh என்ன கொடும சரவணன் லூசு தனமா இறுக்கு
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Venkataram Vt - Bangalore,இந்தியா
22-டிச-201201:35:11 IST Report Abuse
Venkataram Vt Heartfelt condolence to Nithyasree Mahadevan. God should not have punished her like this
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Ding Tong - Thiruchy,இந்தியா
21-டிச-201213:41:07 IST Report Abuse
Ding Tong மாயன் காலன்டர நம்பியிருப்பரோ
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
kamarud - ooty,இந்தியா
21-டிச-201213:37:39 IST Report Abuse
kamarud மனைவி மேல் உள்ள கோபத்தால் பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு செல்வதை ஆண்கள் எப்போது நிருத்தபோராங்களோ
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
RAJA - chennai,இந்தியா
21-டிச-201212:01:24 IST Report Abuse
RAJA என்ன தான் பணம் புகழ் இருந்தாலும் பல பேருக்கு நிம்மதி கிடைப்பது இல்லை. பாவம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் முடிவு. அவர்கள் அவர்களின் நிம்மதி மட்டும் பார்கிறார்கள். அந்த செயலால் பாதிக்க பட போகிறவர்களை பற்றி நினைப்பது இல்லை
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
mirudan - kailaayam,இந்தியா
21-டிச-201210:53:30 IST Report Abuse
mirudan மனிதன் ஏதோ ஒரு துறையில் தான் சாதிக்க முடியும் போல, இவரின் சாவை சீர் தூக்கி பார்த்து வளரும் / வளர்ந்த கலைஞர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்தது கொள்வது நல்லது.
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Hari - Chennai,இந்தியா
21-டிச-201209:49:31 IST Report Abuse
Hari ஆழ்ந்த அனுதாபங்கள். நட்சத்திரங்களை பார்த்துதான் ரசிக்க முடியும், குடும்பம் நடத்த இயலாது
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
21-டிச-201209:06:55 IST Report Abuse
Krishnamoorthy Srinivasa Rao பல பிரபலங்களின் மனைவிகள் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும் தற்கொலை வரை போவதில்லை.. ஆனால் ஒரு பிரபலத்தின் கணவராக இருந்து ஏதோ காரணத்துக்காக மகாதேவன் மரணம் அடைந்தது தன்னை தானே தண்டித்து கொள்ளவா,அல்லது நித்யஸ்ரீயை தண்டிப்பதாக கருதி இப்படி தற்கொலை செய்து கொண்டாரோ தெரியவில்லை ..இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியை தவிக்க விட்டு சென்றதும் ஒரு ஆணாதிக்க மனப்பான்மையே.
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Yegnasamy Rajagopalan - Bangkok,தாய்லாந்து
21-டிச-201208:37:41 IST Report Abuse
Yegnasamy Rajagopalan Heartfelt condolence to Nithyasree. Could not believe. When I ws in Ghan, West Africa in 1996. 1997, Mr. Mahdevan's cousin Mr. N.L. Srikanth is close fri of mine. The movie Jeans was releases and the song by Nithyasree, I copied it in a cassette and gave it to mother of N.L. Srikanth. Such a wonderful singer. Pray God to give courage to Nithyasree and her daughters. Let she continues her singing. Y. Rajagopalan, Bangkok
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Venkatesh Rao - Pune,இந்தியா
21-டிச-201208:06:01 IST Report Abuse
Venkatesh Rao மகாதேவன் தன்னையும் அழித்துக்கொண்டு தன குடும்பத்தின் நிம்மதியையும் அழித்து விட்டார். நித்ய ஸ்ரீ யும் தற்கொலைக்கு முயற்சி செய்த செய்தியை நம்பவே முடியவில்லை. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் சங்கீத வானில் உலா வரவேண்டும். அதற்கு அவர் மனமுருகி பாடி துதிக்கும் செந்தில் வடிவேலன் துணை வர வேண்டும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.