சென்னை:""தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், எங்களின் செய்திகளை சுவர்களில், கரித்துண்டுகளை வைத்து எழுதுவோம்,'' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின், 91வது பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
வடசென்னை, தங்கசாலையில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின், 91வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் கருணாநிதி பேசியதாவது:டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவும், அப்பகுதி, கருணாநிதியின் தொகுதி எனவும், "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது உண்மை தான்; நான் அதை மறுக்கவில்லை.அதைத் தடுக்க வேண்டியதற்கான செங்கோல், என்னிடம் இல்லை. செங்கோல், கொடுங்கோலாக மாறி, வேறு ஒருவர் கையில் உள்ளது. திருவாரூர் தொகுதியை சுற்றியுள்ள மயிலாடுதுறை மற்றும் சிவகாசி உள்ளிட்ட இடங்களில், ஏழு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அவர்களுடைய குடும்பத்தாருக்காக, தி.மு.க., சார்பில், தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம், 3.5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன். இது வெறும் பேச்சு தான் என்றும் சிலர் எழுதுவர். எனவே, அதை இங்கேயே, திருவாரூர் மாவட்ட செயலர் கலைவாணனிடம் தருகிறேன். அதை உரியவர்களிடம் அவர் சேர்ப்பித்து எனக்கு ரசீது தருவார்.அண்மையில், தி.மு.க., சார்பில் மின்வெட்டை கண்டித்து தமிழகத்தில், 500 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அது குறித்த செய்தியை, தினமலர் உள்ளிட்ட சில நாளிதழ்கள் புறக்கணித்து விட்டன.
அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி செய்திகளை போல, தி.மு.க., கட்சி செய்திகளையும் அவர்கள் வெளியிட வேண்டும்.செய்தி வெளியிடவில்லை என்பதற்காக நாங்கள் கதற மாட்டோம். அவ்வாறு வெளியிடா விட்டால் கவலையில்லை; எங்களுக்கு சுவர்கள் இருக்கின்றன; கரித்துண்டு இருக்கிறது. பத்திரிகை மட்டுமே எங்களுக்கு மூல பலம் இல்லை. மூளை பலம் இருக்கிறது. பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து எங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும்.இவ்விழாவிற்கு திரண்டுள்ள கூட்டம், வருகிற தேர்தலுக்கான முன்னோட்டம். இருண்ட தமிழகத்தை காக்க, தி.மு.க., எழுச்சி பெற அனைவரும் திரள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் வளர்ச்சி, பா.ஜ.,தளர்ச்சி: கருணாநிதி கருத்து "குஜராத், இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள்; காங்கிரஸ் வளர்வதையும், பா.ஜ., தளர்வதையும் எடுத்துக் காட்டுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.
குஜராத், இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ.,வும், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றது குறித்து, நேற்று அறிவாலயத்திற்கு வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு, கருணாநிதி, ""இந்த இரு மாநில முடிவுகள்; காங்கிரஸ் வளர்வதையும், பா.ஜ., தளர்வதையும் எடுத்துக் காட்டுகிறது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திமுக அழிந்துவிட்டது என்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய அறியாமையை நினைத்து எனக்கு நகைப்புதான் வருகிறது. நண்பரே இப்போது அதிமுக ஆட்சியில் இருப்பதால் இன்னும் இரண்டோ , மூன்றோ ஆண்டுகள் கழித்து அதுவும் இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறது. காரணம் ஊரு உலகத்துக்கே தெரியும். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். அதுதான் நம் தமிழ்நாட்டு மக்கள் விஷயத்தில் நடந்திருக்கிறது. இரண்டு மணி நேரம் மின் வெட்டை பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் இப்போது 18 -மணி நேர மின் வெட்டுக்காக தன மூளையை அவசரமாக தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். மு.க வந்து தான் அதை மீட்டு எடுக்க வேண்டும். அந்த நன் நாளை விரைவில் எதிர்ப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல் ஏதேதோ கருத்து எழுதிக்கொண்டு.....
பலருடைய பாதங்கள் மிதிபடுவதால் பூங்காவில் உள்ள புல் அழிந்து விடுவதில்லை. அதன் அழகும் கேட்டுவிடுவதில்லை. அதுபோல் தான் இந்த கருணாநிதியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்ந்தவர். மக்கள் இவரை வாழ்த்தி இவர் வளர்ந்து விடவில்லை. மக்கள் இவரை சபித்து சபித்து தான் வளர்ந்தார். உங்களுடைய சாபம் தான் இவரை நீண்ட ஆயுளோட வாழ வைக்கிறது. பூணுல் என்ற வார்த்தை வந்த பின்தான் திமுக செய்தி தினமலரில் வருகிறது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.