திருவண்ணாமலை: ""முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திராணி இருந்தால், என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலையில் மாவட்ட, தி.மு.க., சார்பில் திருவண்ணாமலை லோக்சபா தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க., வினர் மீது பொய் வழக்கு போட்டு பயமுறுத்தினர், அதற்கெல்லாம் இந்த பனங்காட்டு நரி அஞ்சாது. தேர்தலில் அதிக வெற்றி பெற்றவனும், தி.மு.க.,காரன் தான், தோற்றவனும், தி.மு.க., காரன்தான்.மின்வெட்டு பிரச்னை, 2012க்குள் தீரும் என, கூறினார், அதுவும் நடக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் இருந்த, இரண்டு மணி நேர மின் வெட்டு, தற்போது, 18 மணி நேரத்துக்கு மேலும் நீடிக்கிறது.
மேட்டூர், வல்லூர், வடசென்னை, தூத்துக்குடி, ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டவை. ஆனால், ஜெயலலிதா, தி.மு.க., ஆட்சியில் மின் உற்பத்திக்கான எந்த திட்டமும் கொண்டுவரவில்லை என, கூறி வருகிறார்.நான் கூறுவது பொய்யாக இருந்தால், உங்களுக்கு திராணி இருந்தால், என் மீது வழக்கு போடுங்கள் பார்ப்போம். தமிழகத்தில் உள்ள மின் நிலைமை குறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், தமிழகத்தில் மின்பிரச்னையை நீதிமன்றமே கண்காணிக்கும் என, கூறியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
மாஜியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்:முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, கடந்த சட்டசபை தேர்தலில், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, பிச்சாண்டியின் சகோதரர் கருணாநிதியை வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வைக்க காய் நகர்த்தி வருகிறார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் பிச்சாண்டி பேசும் போது, ""நாம் கடந்த சட்டசபை தேர்தலில் உட்கட்சி பூசலால் தோல்வியை தழுவ நேரிட்டது. அதனால் நாம் எவ்வளவு இன்னல்களை அனுவிக்கிறோம். நாம் ஆட்சிக்கு வரவேண்டியவர்கள், ஆட்சியை இழந்து அல்லபடுகிறோம். வரும் லோக்சபா தேர்தலில் இது போன்று செயல்படாமல் வெற்றி பெற வேண்டும்,''என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், ""பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைப்பவனே தி.மு.க., காரன்,'' என, கூறினார். இது பிச்சாண்டியின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அது சரி... உங்கள் மீது அபகரிப்பு புகார் வந்த போது, இதே போல கமிஷனர் அலுவலகம் சென்று ஜெயலலிதா மீது புகார் கொடுத்து தன் மீது வந்த வழக்கு பொய் வழக்கி, அதை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று உதார் விட்டீர்கள்.. அதே நேரம், சத்தம் போடாமல், புகார் கொடுத்தவருக்கு சேரவேண்டிய சிலகோடி ரூபாய்களை கொடுத்துவிட்டு விஷயத்தை அமுக்கி விட்டீர்கள்... தைரியம் இருந்திருந்தால் சட்டப்படி வழக்கை சந்தித்திருக்க வேண்டியதுதானே...
தமிழர்களுக்கு நன்றி உணர்வு உண்டு, திமுக ஆட்சியில் தான் பணி நியமனங்கள் அதிக அளவில் நடக்கும் ஒரு வியாபாரம் போன்று யார் அதிகம் ரேட் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பணி நியமனம் இப்படி பதவிக்கு வந்தவர்கள் தாங்கள் கோடீஸ்வரர் ஆக பணி கொடுத்தவருக்கு நன்றி செலுத்தும் விதமாக என்ன வழக்கு போட்டாலும் அதை அவர்களுக்கு தெரிய படுத்தி விசுவாசம் காட்டும் காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வரை இருப்பதால் ஸ்டாலின் தாத்தா தெனாவட்டாக பேசுகிறார் அவ்வளவுதான். இதை காமெடி யாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர சீரியஸாக எடுத்து கொள்ள கூடாது

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.