ஒரு புகைப்படக்கலைஞரை பெருமைப்படுத்துவதற்காக கனடா நாடு அவரது நூற்றாண்டின் போது சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது.யார் அந்த புகைப்படக்கலைஞர்.
உலகின் தலை சிறந்த நூறு மனிதர்களைப் பற்றி தொகுத்து அவர்களைப் பற்றிய புத்தகம் ஒன்று வெளியானது, அந்த நூறு பேரில் 51 பேரின் புகைப்படங்களை எடுத்தவர் ஒரே ஓரு புகைப்படக் கலைஞர்தான்.
நீங்கள் என்னை புகைப்படம் எடுக்க வந்தது எனது அதிர்ஷ்டமே, புகைப்பட பதிவு முடிந்த பிறகு என்னுடைய விருந்தினராக இருந்து என்னுடன் கட்டாயம் உணவருந்தவேண்டும் என்று பிடரல் காஸ்ட்ரோ ஒரு புகைப்படக்கலைஞரை பாராட்டி சிறப்பு செய்தார்.
கோபக்காரரான வின்ஸ்டர் சர்ச்சிலின் உண்மையான முகத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, அவர் புகைத்துக் கொண்டிருந்த சுருட்டை பிடுங்கும் அளவு தைரியமாக செயல்பட்ட புகைப்படக்கலைஞர் ஒருவர் உண்டு
தனது வாழ்நாளில் 15 ஆயிரத்து 312 புகழ்பெற்ற நபர்களை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நெகடிவ்களில் பதிவு செய்த, யூசுப் ஹர்ஷ் என்பவர்தான் மேலே சொன்ன அத்தனை பெருமைக்கும் உரிய மாபெரும் போர்ட்ரெய்ட் புகைப்படக்கலைஞர்.
இன்றைய துருக்கியான அன்றைய ஒட்டோமனில் 1908 ம் ஆண்டு பிறந்த யூசுப்ஹர்ஷ் பசி, பட்டினியோடுதான் வளர்ந்தார். பஞ்சம் பிழைக்க கனடாவிற்கு பதிமூன்று வயதில் குடும்பத்தாருடன் இடம் பெயர்ந்தார், தன்னுடைய மாமாவின் போட்டோ ஸ்டூடியோவில் வேலை பார்த்துக்கொண்டே படித்தார். மருத்துவம் படிக்க விரும்பினார், ஆனால் பொருளாதார சூழ்நிலை அதற்கு தடைவிதிக்கவே முழு நேர புகைப்படக்கலைஞரானார்.
1941ல் இவர் எடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலின் புகைப்படத்தால் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. ஒரு காலகட்டத்தில் இவரது கேமிரா முன் உட்கார்ந்து படம் எடுத்துக் கொள்ள அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பெரும் அரசியல்வாதிகள், நடிகர்கள், செல்வந்தர்கள் ஆசைப்பட்டார்கள், அதற்காக தேதி கேட்டு காத்துக்கிடந்தார்கள்.
யூசுப் புகைப்படம் தொடர்பாக இதுவரை 15 புத்தகங்கள் எழுதியுள்ளார், இவரைப் பற்றி 11 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இவரது புகைப்படக்கலையை பலர் இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர், நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் இவரது வரலாறைச் சுமந்தபடி வலம் வருகின்றது. பூத உடம்பு மறைந்திருக்கலாம், ஆனால் இன்றும் மங்காத, மறையாத புகழுடன் போர்ட்ரெய்ட் புகைப்படக்கலையின் தந்தையாக உலா வருகிறார் யூசுப் ஹர்ஷ்.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.