சென்னை:முதல்வர் நரேந்திர மோடி, தலைமையில், குஜராத்தில் புதிதாக அமையவிருக்கும், அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து, நான்காவது முறையாக குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி, நாளை மறுநாள், 26ம் தேதி பதவியேற்க உள்ளார்.அமோக வெற்றி பெற்ற, நரேந்திர மோடிக்கு, இம்மாதம், 20ம் தேதி தொலைபேசியில் ஜெயலலிதா, வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நரேந்திர மோடி, அழைப்பு விடுத்தார்.நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று, முதல்வர் ஜெயலலிதா, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஆமதாபாத் செல்வார் என, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.