தஞ்சாவூர்:கணவனுடன்
ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண், ஒன்பது மாத ஆண் குழந்தையுடன், ரயில்
முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை அருகேயுள்ள, குருங்கூரை
சேர்ந்தவர் ரவி மனைவி கிரினா, 26, இவர்களுக்கு ராபின்சன் என்ற, ஒன்பது மாத
ஆண் குழந்தை உள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.கணவன் - மனைவிக்கு
இடையே ஏற்பட்ட தகராறில், வேதனையடைந்த கிரினா, குழந்தை ராபின்சனுடன், நேற்று
காலை, 10:40 மணிக்கு, தஞ்சை - கும்பகோணம் சாலையிலுள்ள ரயில்வே தண்டவாள
பகுதிக்கு சென்று, அவ்வழியே வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்தார்.
தாயும், குழந்தையும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்த
தஞ்சை ரயில்வே எஸ்.ஐ., கோவிந்தராஜ் மற்றும் போலீசார், கிரினா, ராபின்சன்
ஆகியோரை கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம்
குறித்து தஞ்சை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.