மதுரை:மதுரையில்,
இடபிரச்னை தொடர்பாக, மாநகராட்சி 30வது வார்டு (மேலமடை) அ.தி.மு.க.,
கவுன்சிலர் ஜெயக்குமார் மீது, கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர்.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்
ராஜபொண்ணு,69. இப்பகுதியில் உள்ள மனையை உரிமை கொண்டாடுவது தொடர்பாக,
இவருக்கும், குடும்பத்தினருக்கும் பிரச்னை உள்ளது. இதற்கு, மதுரை ஆறாவது
பட்டாலியன் போலீஸ்காரர் முத்துசுருளி, கவுன்சிலர் ஜெயக்குமார் ஆகியோர்
உடந்தையாக இருந்ததாக கூறி, போலீசில் ராஜபொண்ணு புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஆனதை தொடர்ந்து, மதுரை இரண்டாவது ஜூடிசியல்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுபடி, ஜெயக்குமார்,
முத்துசுருளி உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ஜெயக்குமார்
கூறியதாவது:அது அவர்களது குடும்ப பிரச்னை. இவ்வழக்குக்கும், எனக்கும்
சம்பந்தமில்லை. ஏற்கனவே இதுதொடர்பாக, போலீசில் புகார் செய்தபோது, வார்டு
கவுன்சிலர் என்ற முறையில் இருதரப்பையும் சமரசம் செய்ய முயன்றேன். இந்த
காழ்ப்புணர்ச்சியால்தான், என் பெயரையும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை
சட்டப்படி சந்திப்பேன். ராஜபொண்ணு மீது வழக்கு தொடர உள்ளேன், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.