புதுடில்லி:" "பெண்களின்பாதுகாப்பு தொடர்பாக, உரிய நடவடிக்கைஎடுக்கப்படும்,'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நீதிகேட்டு , பல்வேறு தரப்பினரும்போராட் டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் கோபத்தில் உண்மையும், நியாயமும் உள்ளது.அதேநேரத்தில்,எல்லாரும் அமைதி காக்க வேண்டும். இப்பிரச்னையை முன்வைத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது வருத்தத்திற்கு உரியது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க, நாம் எல்லாரும் ஒன்றிணைந்துள்ளோம். அதேநேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவியின் உடல்நிலை குறித்தும் கண்காணித்து வருகிறோம். அவர், விரைவில் குணமடைந்து வீடுதிரும்ப, நாம் எல்லாரும் பிரார்த்தனை செய்வோம்.பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, உரிய நடவடிக்கையை மத்தியஅரசு எடுக்கும். இவ்வாறு, பிரதமர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவியின் தந்தை வேண்டுகோள்: பொதுச்சொத்தை சேதப்படுத்தாமல் , அமைதி திரும்ப போலீசாருக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவ மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லி பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறுகையில், எனது மகள் தைரியமானவள். அவர் நிச்சயம் உயிர்பழைப்பாள். தற்போது சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன். அவர் மனஉறுதி மிக்கவர். டில்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல், போலீசாருக்கு உதவ வேண்டும் என கேட்டு கொண்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
PM, please make a strong punishment, i.e hanger only immediate action and we can protect Womens in India, within 24 hr, hanger is ready, ie highlight, then you say, Protecting Womens, OR people never accept any other solutions. Hanger punishment for Womens and childrens murder and womens rape and childrens kidnap. India will become strong "Vallarachu"

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.