சபரிமலை:சபரிமலையில், வரும், 26 ம் தேதி, மண்டல பூஜை நடக்கிறது. இதற்கு முன்னோடியாக நேற்று முன்தினம் இரவு தேவஸ்தான ஊழியர்கள் சார்பில், கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.இதையொட்டி, சன்னிதானத்தில் தீபாராதனைக்கு பின், கொடிமர மூட்டில் ஊழியர்கள் அணிவகுத்தனர். வாத்திய மேளங்கள் முழங்க, சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் என, பல வடிவங்களில் ஊழியர்கள், அலங்கரித்து வந்தனர்.தொடர்ந்து கற்பூர தீபத்தை, கோவில் பூஜாரி கண்டரரு ராஜீவரரு ஏற்றினார். கற்பூர ஆழி பவனி சன்னிதானத்தையும், மாளிகைப் புறத்தம்மன் கோயிலையும் வலம் வந்த பின், 18 ம் படியருகே நிறைவு பெற்றது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.