குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் நடந்தது.பி.டி.ஏ., தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். நிர்வாகி பன்னீர் செல்வராஜ் வரவேற்றார். 1954ம் ஆண்டு முதல் நடப்பு கல்வி ஆண்டு வரை, இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள், தங்களது மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொண்டனர். பள்ளி பருவத்தில் நடந்த சம்பவங்கள், குடும்ப சூழ்நிலை, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், குடிநீர் தொட்டி, சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.