பெங்களூரு: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தங்களை கலந்தாலோசிக்காமல் வெளியிடக்கூடாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதியும் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், இன்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை தங்களை கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக அரசிதழில் வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள இறுதித்தீர்ப்பில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து கர்நாடகா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
காவிரி பிரச்னை தொடர்பாக, கடந்த 15ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்டிய ஷெட்டார், இது தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.