Advertisement
5 வயது சிறுமி கற்பழித்து கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,19:14 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 24,2012,19:21 IST

காசியாபாத் : டில்லி அருகே உள்ள நொய்டாவில், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை கொலை செய்த, சுரேந்தர் கோலி மீதான, 5 வயது பெண் குழந்தை கற்பழிப்பு வழக்கில், குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
நொய்டா அருகே உள்ள, நித்தாரி கிராமத்தில், மனிந்தர் சிங் பாந்தர் என்பவர் வீட்டில் வேலை பார்த்த சுரேந்தர் கோலியும், மனிந்தர் சிங்கும், 19 இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை, கற்பழித்து, கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, சில ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இதற்கு முந்தைய, நான்கு வழக்குகளில், கோலிக்கும், அவனுக்கு உடந்தையாக இருந்த மனிந்தர் சிங்குக்கும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5-வது தூக்கு தண்டனை:இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு நித்தாரியைச் சேர்ந்த 5 வயது சிறுமி காணாமல் போனார். பின்னர் அந்த சிறுமி கடத்தி, கற்பழித்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் , நிதாரி கிராமத்தைச் சேர்ந்த மனிந்தர்சிங் பாந்தரின் உதவியாளர் சுரேந்தர் கோலி என்பது தெரியவந்தது அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு காசியாபாத் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் தடயங்களை அழித்த வழக்கில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, "கோலி குற்றவாளி' என, நேற்று முன்தினம், காசியாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரபரப்பான இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்ட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி நீதிபதி, எஸ்.லால் குற்றவாளி கோலிக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஏற்கனவே சுரேந்தர் கோலிக்கு 4 முறை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கொலை , கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கோலிக்கு கடந்த பிப்ரவரி 2009, செப்டம்பர் 2009, மே, 2010, டிசம்பர் 2010 ஆண்டுகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பரபரப்பான இந்த வழக்கிலும் என 5-வது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (9)
Natarajan Ranganathan - chennai,இந்தியா
25-டிச-201212:54:50 IST Report Abuse
Natarajan Ranganathan சுறேண்டர்க்கு இன்னும் எவ்வளவு தூக்கு தண்டனைகள் வைடிங்கில் உள்ளனவோ? யெல்லா தீர்ப்புகளும் வந்து பெறகு நிறைவேற்றுவதற்கு எவ்வளவு வருடங்கள்ளகுமோ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
25-டிச-201212:01:12 IST Report Abuse
ratthakatteri_modi தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
25-டிச-201211:51:59 IST Report Abuse
Rajasekaran Palaniswamy ஜனநாயக நாடு என்ற போர்வையில், கருணை மனு அது இது என்று காலம் தாழ்த்தக்கூடாது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
manal sharqia - TelAviv,இஸ்ரேல்
25-டிச-201210:43:13 IST Report Abuse
manal sharqia தூக்கு தண்டனை என்று வந்த பின் அது என்ன அஞ்சாவது தூக்கு ஆறாவது தூக்கு, இது என்ன டிபன் கேரியர் சட்டியா? யோவ் சட்டம் தெரியாத ....களா,, தூக்குன்னு தண்டன கொடுத்தா தூக்குல போடுங்கடா.. அதை விட்டுட்டு தேவ இல்லாம வழக்காடு மன்ற நேரத்தையும், நீதி பதியின் எனர்ஜியை யும் வீணா ஆக்குறீங்க ?
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Sulaiman Badsha - Muscat,ஓமன்
25-டிச-201210:28:49 IST Report Abuse
Sulaiman Badsha சரியான தண்டனைதான் ஆனால் இப்போது இந்த அறிவிப்பு போராட்டங்களை திசை திருப்பும் முயற்சியாக இருக்குமோ
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Irshad - Coimbatore,இந்தியா
25-டிச-201208:01:27 IST Report Abuse
Irshad இஸ்லாமிய சட்டங்கள் தான் மனித குலத்திற்கு சரியான தீர்வு.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
TAMILWASIM - coimbatore,இந்தியா
25-டிச-201211:55:20 IST Report Abuse
TAMILWASIMசரியாக சொன்னீர்கள் நண்பரே....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
art - ajman  ( Posted via: Dinamalar Windows App )
25-டிச-201202:50:42 IST Report Abuse
art சரியான தன்டனை
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
25-டிச-201201:20:19 IST Report Abuse
GOWSALYA படிக்கவே வேதனையா இருக்கிறது....தகப்பன் மாதிரியான ஒருவன்,இப்படிச்செய்ய எப்படி மனம் துணிந்தது....?..கடவுள் இப்படிப்பட்டவனை ஏன் என்னும் உயிருடன் வைச்சுண்டு இருக்கானோ தெரியாது.....இவனைத் தூக்கில் போடக்கூடாது,அதிவிஷம் கொண்ட பாம்புகள் நடுவில் கட்டிவைக்கணும்.அது எல்லோருக்கும் ஒரு பாடமா அமையணும்..........
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.