ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில், டாடா தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.ஜாம்ஷெட்பூரில், டாடா ஸ்டீல் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணி புரியும் தொழிலாளர்கள், நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் தான் வர வேண்டும்; சொந்த வாகனங்களில் வரக்கூடாது என, உத்தரவிடப் பட்டிருந்தது.இதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காத தொழிலாளர்களை, தொழிற்சாலைக்குள், பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.இதனால் கோபமடைந்த சிலர், பாதுகாவலர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். கும்பலை கலைக்க, பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், எட்டு தொழிலாளர்களும், சம்பவத்தை படம் பிடிக்கச் சென்றிருந்த, பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள், டாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.