ஐதராபாத் :"" நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.
ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.
இவரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில், மீண்டும் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:நானும், ஒரு தந்தை தான்; எனக்கும், குழந்தைகள் உள்ளன. ஒரு தந்தையாக, என் கோபத்தை வெளிப்படுத்தினேன். டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், என்னை மிகவும் பாதித்துள்ளது. இது, கண்டனத்துக்குரியது. நாட்டையே, இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. நான் தெரிவித்த கருத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்னால் கருத்து எழதாமல் இருக்க முடியவில்லை. சுதந்திரம் வேறு, முன்எச்சரிகை வேறு. நாட்டின் மிக பெரிய பதவியில் உள்ள பிரதமர் எல்லா அதிகாரமும் உண்டு. அதற்காக அவர் பாதுகாவலர் இல்லாமல் செல்லமுடியுமா? போட்டு தள்ளிடுவார். அதன்பின் அவர் உரிமை, சுதந்திரம், பிற அனைத்தும் பேசி என்ன பலன்? இதற்காக நம் காவலரை குறை கூற முடியுமா? சட்டம், மற்றும் அனைத்தும் தயாராக உள்ளன. ஆனால் அவை யாவும் நிகழ்வு பின்னர் தான் வரும். என்னிடத்தில் கணிசமான பணம் உள்ளது எனில் நான் மறைத்து தான் எடுத்து செல்ல வேண்டும். அதை விட்டு எல்லோர்க்கும் தெரிகிற மாதிரி எடுத்து செல்வேன், அது எனது பிறப்புரிமை என்று கோரினால், சட்டம் இயற்றலாம். ஆனால் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
இவர் சொன்னதில் தப்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஏரியாவுல வெறி நாய் இருக்கு அந்தப் பக்கம் போகாதீங்கன்னு SONNAA ஆறு அறிவு இருக்கவன் போகவே மாட்டன். இல்ல எனக்கு சுதந்திரம் கிடச்ருசின்னு அந்த பக்கம் PONAAL நாய் மட்டும் இல்ல ENTHANNAAYALUM ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெனாவெட்ட போனா நாய் கடிக்கத்தான் செய்யும் இத எந்த சுதந்திரத்தாலும் தடுக்க முடியாது. அதனால நல்லது சொன்னா கேட்டுக்கணும். இல்ல உங்களுக்கு மனசாட்சி இருக்கா அப்படி இப்படின்னு முட்டாள் தனமா பேசுறதுனால சில வெறி நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. சோ, என் அன்பு சகோதரி பாதுகாப்பான இடத்தில சுதந்திரமா இருங்க தப்பில்ல. பட் பாதுகாப்பு ரெம்ம்போ அவசியம்..
என்ன கொடுமை இது... எப்பொழுது பெண்கள் நள்ளிரவில் சுதந்திரமாக நகைகளுடன் நடமாட முடிகிறதோ அப்பொழுது தான் இந்நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று சொன்ன காந்தியடிகளின் கனவில் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பாதி கூட நிறைவேரவில்லையே, அட நகைகளை விடுங்க, நள்ளிரவில் சுதந்திரமாக செல்ல கூட முடியவில்லை என்றால், இது நம்முடைய கையாலகதநத்தை தான் காட்டுகிறது. தப்பு செய்தவனை விட்டு பெற்றவர்களை தண்டிக்க சொல்லும் நீங்கள் இன்னும் ஐதர் அலி காலத்திலேயே வாழ்கிறீர்கள் என்று தான் என்ன தோன்றுகிறது. இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுது அதை மாற்ற யோசிப்பதை விடுத்து விலகிசெல்லும் மனப்பான்மை இருக்கும் வரை குற்றங்கள் பெருகி கொண்டு தான் இருக்கும்... எங்கோ நடந்த ஒரு குற்றம் நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம் ஜாக்கிரதை....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.