புதுச்சேரி:புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 1 செ.மீ., கன சதுர அளவுள்ள குடில் செய்து, தலா, ஒவ்வொரு அரிசியில் குழந்தை இயேசு, மாதா, சூசையப்பர், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை உருவாக்கியுள்ளார். புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர், சுந்தரராசு, 35; பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, 1 செ.மீ., கன சதுரம் அளவுள்ள குடில் செய்துள்ளார்.அந்தக் குடில் நடுவே, மிளகுத் தூளைப் பயன்படுத்தி, மலையை உருவாக்கியுள்ளார். தலா, ஒவ்வொரு அரிசியில் ஒரு உருவமாக, குழந்தை இயேசு, மாதா, சூசையப்பர், தேவதை, கிறிஸ்துமஸ் தாத்தா உருவாக்கியுள்ளார்.இயற்கையான புல், செடி, பூக்கள் போன்றவைகளும், இயேசு பிறக்கும் போது தெரியும் வால் நட்சத்திரம், குழந்தை இயேசு மீது படுவது போலவும், உயிரோட்டமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை லென்ஸ் உதவியுடன் மட்டுமே, தெளிவாக பார்க்க முடியும். இந்த மிகச் சிறிய கிறிஸ்துமஸ் குடிலை, அப்பகுதி மக்கள் பலர் பார்வையிட்டு ரசித்து, ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.