தமிழகத்தில், 70 சதவீதம் இளம்பெண்களுக்கு ரத்தசோகை நோய் இருப்பதால், பள்ளிகளில் மாணவியர் ஊட்டத்துடன் இருக்க விளக்கம் அளிப்பதுடன், வாரம் ஒருமுறை இரும்பு சத்து மாத்திரை உட்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள, "ஹீமோ குளோபின்' அளவு குறைவதால், ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. இதுகுறித்து பள்ளிகளில், மாணவியர் தெரிந்து கொள்ளும் வகையில், "ரத்தசோகை நோயை தடுப்போம்; வளர் இளம்பெண்களின் வாழ்வை காப்போம்' என்ற புத்தகத்தை வழங்கி வருகின்றனர். இதில், ரத்தத்தில் எவ்வளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்; எவ்வளவு குறைந்தால் ரத்தசோகை ஏற்படும்; இதனால் ஏற்படும் பாதிப்புகள்; ஆண்களை விட பெண்களிடம், இது ஏன் அதிகமாக காணப்படுகிறது; அறிகுறிகள்; இரும்பு சத்து நிறைந்த உணவு வகைகள்; ரத்தசோகை வராமல் இருக்க பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு போன்றவை விளக்கப்பட்டுள்ளன.- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.